Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
40 கதைகள் கேட்டுத் தூங்கிட்டேன்.. ஆடியோ லாஞ்ச் பேச்சால் வம்பில் சிக்கிய அஸ்வின்.. பறக்கும் மீம்கள்!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் குமார் ஹீரோவாக என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்னையில் அந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் அரங்கேறியது.
அந்த ஆடியோ லாஞ்சில் 40 கதைகள் கேட்டுத் தூங்கி விட்டேன் என அவர் பேசியதால் நெட்டிசன்கள் மீம்களை போட்டு அஸ்வினை வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஹீரோவான அஸ்வின்
திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த குக் வித் கோமாளி அஸ்வின் குமார் இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். சென்னையில் நடைபெற்ற அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
40 கதைகள் கேட்டு தூங்கிட்டேன்
அந்த விழாவில் பேசிய நடிகர் அஸ்வின் குமார் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க.. பொதுவாக கதை பிடிக்கவில்லை என்றால் இயக்குநர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகள் கேட்டு அப்படி தூங்கி இருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட முதல் கதை ஹரிஹரனோட கதை தான் என பேசி இருந்தார்.
ஆணவத்தில் அஸ்வின்
இயக்குநர்கள் கஷ்டப்பட்டு ஹீரோவுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது அதை முழுதாக கூட கேட்க முடியாத அளவுக்கு அப்படி எத்தனை படங்களில் அஸ்வின் நடித்து விட்டார். இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், கோலிவுட் இயக்குநர்களை இப்படி பகைத்துக் கொண்டால் எப்படி அஸ்வினுக்கு அப்படி என்ன ஆணவம் என நெட்டிசன்கள் மீம்களாக போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.
தலையில் மண்
வேறு யாருமே தேவையில்லைங்க.. தனக்குத் தானே தலையில் மண் வாரிப் போட்டுக் கொண்டார் குக் வித் கோமாளி அஸ்வின் என்று நெட்டிசன்கள் பங்கமாக மீம் போட்டுக் கலாய்த்து வருகின்றனர். என்ன சொல்ல போகிறாய் இசை வெளியீட்டில் அஸ்வின் என்ன சொல்ல போகிறாருன்னு பார்த்தா இப்படி சொல்லிட்டாரே என கலாய்த்து வருகின்றனர்.
2 விஜய் 4 ரஜினி
ஆடியோ லாஞ்சிற்குள் வந்தவுடன் அஸ்வின் தன்னை 2 விஜய் ஆகவும் 4 ரஜினியாகவும் உணர்கிறார் என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இதற்கு மேல் ஆடியோ லாஞ்சில் அஸ்வின் இப்படி பேசவே கூடாது என நெட்டிசன்கள் மீம்களாக போட்டு வச்சி செய்து வருகின்றனர்.
ஒரே ஒரு ஆடியோ லாஞ்ச்
ஒரே ஒரு ஆடியோ லாஞ்ச் தான் டோட்டல் கரியரும் க்ளோஸ் என வடிவேலு மீம்களை போட்டு அஸ்வின் தெரியாமல் உளறியதை பார்த்து படையெடுத்து தாக்கி வருகின்றனர். ஹீரோவான பின்பும் இவர் கோமாளியாகவே இருக்கிறாரே என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்