twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீராத பஞ்சாயத்து.. தவறை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியில்.. இன்றும் வாங்கிக்கட்டும் பாலாஜி!

    |

    சென்னை: பாலாஜி பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். வாரா வாரம் ஒரு பஞ்சாயத்தை இழுத்தார்.

    சுல்தான் டீசர் அப்டேட்... கார்த்தி ரசிகர்கள் குஷி! சுல்தான் டீசர் அப்டேட்... கார்த்தி ரசிகர்கள் குஷி!

    சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, ரியோ என பெரும்பாலான ஹவுஸ்மேட்டிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதில் சனம் ஷெட்டியிடம் தகாத வாரத்தைகளால் பேசினார்.

    தறுதலை

    தறுதலை

    சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப்போட்டியில் வென்றார் என்று பாலாஜி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் சனம் ஷெட்யை அவளே இவளே என்று பேசிய பாலாஜி, தறுதலை என்று திட்டியும் விமர்சனத்துக்குள்ளானார்.

    உண்டு இல்லை என்று..

    உண்டு இல்லை என்று..

    இதேபோல் சுரேஷ் சக்கரவர்த்தியிடமும் மரியாதை குறைவாக பேசினார். பாலாஜி பேசியது தன்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாக கூறினார். இதேபோல் ஆரியையும் உண்டு இல்லை என செய்தார் பாலாஜி.

    பிபியை எகிற வைத்து

    பிபியை எகிற வைத்து

    ஆரியை தரக்குறைவாக பேசியதோடு அடிக்கவும் பாய்ந்தார். பாலாஜி ஆரியிடம் போட்ட சண்டையால் பார்வையாளர்களே பதறினர். பிபியை எகிற வைக்கிறார்கள் என பிக்பாஸ் பார்ப்பதையே தவிர்த்தவர்களும் உண்டு.

    வெள்ளிக்கிழமை ராமசாமி

    வெள்ளிக்கிழமை ராமசாமி

    வாரம் முழுக்க சண்டை போட்டாலும் வெள்ளிக் கிழமை ஆனால் மன்னிப்பு கேட்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் இதையே செய்து வந்த இதனால் வெள்ளிக் கிழமை ராமசாமி என்றும் அவரை ஓட்டி வந்தனர் நெட்டிசன்கள்.

    டுபாக்கூர் விவகாரம்

    டுபாக்கூர் விவகாரம்

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் வெளியே வந்த பிறகும் பாலாஜியை சர்ச்சைகள் சுற்றி வருகின்றன. டுபாக்கூர் விவகாரத்தில் ஜோ மைக்கேலுடன் மல்லுக்கட்டி வரும் அவர், அவரை தாக்கும் வகையில் டிவிட்டி வந்தார்.

    வாங்கிக்கட்டும் பாலாஜி

    வாங்கிக்கட்டும் பாலாஜி

    மேலும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்தனர். இந்நிலையில் இன்று மேலும் ஒரு டிவிட்டை பதிவிட்டு வாங்கிக்கட்டி வருகிறார் பாலாஜி.

    மன்னிப்பு கேட்கும் மனிதன்

    மன்னிப்பு கேட்கும் மனிதன்

    அதாவது, தங்கள் தவறுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத மனிதர்களில், நான் மன்னிப்பு கேட்கும் மனிதனாக இருந்தேன். சக மனிதர்கள் தங்களைப் பற்றி நன்றாக உணர வேண்டும் என்பதற்காக. நான் தொடர்ந்து செய்வேன், ஏனென்றால் வாழ்க்கையின் நோக்கம் நான் நம்பும் மற்றவர்களை தூக்கி விடுவதுதான். யாரும் தங்களைப் பற்றி பரிதாபமாக உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக என்று பதிவிட்டுள்ளார்.

    திரும்ப திரும்ப செஞ்சுட்டு

    திரும்ப திரும்ப செஞ்சுட்டு


    இதனை பார்த்த நெட்டிசன்கள், தவறு செய்வது மனித இயல்புதான், செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்கறது சரி தான்... செஞ்ச தப்பையே திரும்ப திரும்ப செஞ்சுட்டு மன்னிப்பு கேட்டா சரியா போய்டும்னு சொல்றது நீ செஞ்ச தப்ப விட பெரிய தப்பு.
    தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு
    என்பது வள்ளுவன் வாக்கு.. அதுதான் மனிதத்தன்மையும் கூட என பதிலளித்து வருகின்றனர்.

    ஒப்புக்கொள்ளவில்லை

    ஒப்புக்கொள்ளவில்லை

    பாலாஜியின் டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மொத்த நிகழ்ச்சியிலும் நீங்கள் உட்பட யாருமே தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்ள வில்லை. அதை மறந்துவிட்டு நகர்ந்து செல்லுங்கள் என்ற பதிவிட்டுள்ளார்.

    English summary
    Netizens trolls Balaji after seeing his tweet. Balaji says, Among the humans who never accept their mistakes, I was the human to apologize.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X