Don't Miss!
- Finance
கோதுமை, சர்க்கரையை அடுத்து அரிசி ஏற்றுமதிக்கும் தடையா?
- Sports
"ஹர்ஷல் பட்டேல் ஒரு ஜோக்கர்" பதற்ற சூழலிலும் ஆர்சிபி தப்பியதன் வியூகம் என்ன.. டூப்ளசிஸ் கூறிய உண்மை
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் பிரியங்காவை வறுத்தெடுக்கும் கமல்...மாநாடு ஸ்டைலில் கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : அக்டோபர் 3 ம் தேதி 18 பேருடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது 90 நாட்களை கடந்து விட்டது. தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் ஆளாக இறுதிப் போட்டிக்குள் சென்று விட்டார் அமீர்.
வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்த அமீர் இறுதிப் போட்டிக்கு சென்று விட்டார். மற்றொரு வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த சஞ்சீவ் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் நாளை ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார் என நேற்றைய எபிசோடின் முடிவில் கமல் கூறி விட்டு சென்றார்.
நாளை
காத்துவாக்குல
ரெண்டு
காதல்
அடுத்த
அப்டேட்...சூப்பர்
தகவலை
வெளியிட்ட
விக்னேஷ்
சிவன்

இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா
இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா அல்லது சிங்கிள் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவர் மட்டும் தான் வெளியேற போகிறார் என்றால், நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ளது. ஆனால் அமீரை தவிர்த்து இன்னும் 6 பேர் வீட்டிற்குள் உள்ளனர். என்ன செய்ய போகிறார் பிக்பாஸ் என்ற கேள்வியும் எழுகிறது.

நிரூப்பை ஏமாற்றி கமல்
நிரூப் சவால் விட்ட படி கமல், நேற்று அவர் தான் முதலில் காப்பாற்றப்படுவதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை பொய்யாக்கி வழக்கம் போல் முதலில் ராஜுவை காப்பாற்றுவதாக அறிவித்தார் கமல். அமீர், ராஜு தவிர மீதமுள்ள 6 பேரில் யார் இன்று வெளியேற போகிறார் னெ்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இன்றைக்கும் பிரியங்கா
இந்நிலையில் 91 வது நாளான இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் இன்றைக்கும் பிரியங்காவை கேள்விகளால் வறுத்தெடுக்கிறார் கமல். நேற்று பேசியதன் தொடர்ச்சியாக இன்றும் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி கமல் பேச உள்ளார்.

அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா
முதல் ப்ரோமோவில், அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா பிரியங்கா? என்கிறார் கமல். அதற்கு பதிலளிக்கும் பிரியங்கா, இப்போ மட்டுமில்ல எப்பவுமே. வெளியேயும் சரி, இங்கேயும் சரி மற்றவர்கள் அன்பு காட்டினால், அதை விட அதிகமாக காட்டுவேன் என்கிறார். அப்போதும் விடாத கமல், இல்லை. அவர்கள் இதை உங்களின் வெற்றிக்காக பயன்படுத்துகிறீர்கள் என்கிறார் என கேட்கிறார்.

என்னை விட்டுடுங்க சார்
அதற்கு சமாளித்து ஒரு வழியாக பதில் சொல்லும் பிரியங்கா, அது என் வெற்றிக்காக பயன்படுதுன்னா சந்தோஷமான விஷயமா நான் எடுத்துக்கிறேன் என்கிறார். என்ன அமீர் சிரிக்கிறீங்க என அமீரிடம் கேட்க, அவர், இந்த ஒரு கேள்வில மட்டும் என்னை விட்டுடுங்க சார் என சிரித்தபடி சொல்கிறார். கமலும் அது எப்படி முடியும் என்கிறார்.

மாநாடு ஸ்டைலில் கலாய்
இதை பார்த்த நெட்டிசன்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை எபிசோட்னாலே கமல் சார் வருவாரு, பிரியங்காவை வறுத்தெடுப்பார். அப்புறம் அடுத்த வாரமும் ரிப்பீட்டு என மாநாடு ஸ்டைலில் கலாய்த்துள்ளனர். கமல் மற்றும் நிரூப்பிற்கு எப்பவுமே பிரியங்கா தானா, வேற யாரையும் கேள்வி கேட்க மாட்டாங்களா.

டோட்டல் வேஸ்ட்
உண்மையை சொல்ல வேண்டுமானால் பிரியங்கா இல்லை என்றால் பிக்பாஸ் சீசன் 5 டோட்டல் வேஸ்ட். பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே 10 வாரமாக நாமினேஷில் இருந்து காப்பாற்றப்படும் ஒரே பெண் போட்டியாளர் பாவனி தான். பிரியங்காவும், ராஜுவும் தான் ஃபைனலுக்கு போவாங்க என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.