twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.. அனிதா ஃபேன்ஸ் கோவிச்சுப்பாங்கள்ல.. அப்செட்டில் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ஆரி பேசியதைப் பார்த்த நெட்டிசன்ஸ் அப்செட் ஆகியுள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோவில் பேசும் கமல் அனிதா, ஷிவானி மற்றும் சனம் ஷெட்டி ஆகிய மூன்று பேரில் யார் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.

    அதற்கு எல்லோரும் சனம் ஷெட்டி இருக்க வேண்டும் என்று சொல்ல ஆரி மட்டும் அனிதா வெளியே போவார் என்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆரிக்கு இது தேவையில்லாத வேலை என்று கூறி வருகின்றனர்.

    ஆண்டவருக்கு சல்யூட்

    நேற்றைய எபிசோடில் கமல் குறும்படம் போட்டதை பார்த்த இந்த நெட்டிசன், உண்மைக்கு கொஞ்சம் உயிரூட்டிய ஆண்டவருக்கு சல்யூட் என தெரிவித்துள்ளார்.

    பிக்பாஸ் ஒழிக

    பிக்பாஸில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதை அறிந்த இந்த நெட்டிசன், சனத்தை வெளியே அனுப்பி சதி செய்த பிக்பாஸ் ஒழிக! என கூறியுள்ளார்.

    பைத்தியம் ஆகனும் பங்காளி

    அந்த நெட்டிசனின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் ஒழியாது பிக் பாஸில் உள்ள பைத்தியங்களை பார்த்து நாமதான் பைத்தியம் ஆகனும் பங்காளி என கூறியுள்ளார்.

    வேண்டாத வேலை

    புரமோவில் ஆரி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.. ஆஜித் வர வர நீ கொஞ்சம் தனித்துவமா எல்லாரையும் புரிஞ்சிட்டு பாரபட்சம் இல்லமா இருக்குற சூப்பர்டா.. ஷிவானி ஏன்டா சொல்லுறீங்க.. அவ இருந்து என்ன பண்ண போறா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    வஞ்சப்புகழ்ச்சி

    மிக்க நன்றி எப்படிடா இந்த பிக்பாஸ் நேரம் செலவிடுவத குறைக்குறது யோசிச்சேன்! சனம்ம எவிக்ட் பண்ணி என் முடிவ சுலபமாக்கிட்டீங்க! அந்த விளையாட்ட புரிஞ்சு விளையாண்ட பெண்ண அனுப்பிச்சிட்டு! வாழ்த்துக்கள் என வஞ்சப் புகழ்ச்சி செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

    Recommended Video

    நண்பர்கள் என்மேல கோப பட்டாங்க | CLOSE CALL WITH ACTRESS SWARNAMALYA PART-01 |FILMIBEAT TAMIL

    வெறுப்பு சேர்க்கிற மாதிரி

    ஆரி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், மனித இயல்பு போல!! வெற்றியும் பாராட்டும் வந்தா கூடவே தலைக்கணமும் அதீத சந்தோஷமும் வந்து விடும் போல.. அனிதா வெளிய போவாங்கன்னு நீங்க சொல்லிருக்க கூடாது ஆரி.. கருத்து வேறுபாடு இருந்தாலும் அதுக்காக இப்படி சொல்ல கூடாது இது அவரது ரசிகர்களிடமும் வெறுப்பு சேர்க்கிற மாதிரி!! என்று கூறியுள்ளார்.

    ஒரே அறிவாளி நம்ம கேபி

    பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் இந்த நெட்டிசன், இந்த வீட்ல உள்ள ஒரே அறிவாளி நம்ம கேபி மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

    English summary
    Netizens reactions over Biggboss today's episode. Netizens upsets over Aari's talk about Anitha.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X