எப்பா.. அனிதாவ கட்டின புண்ணியவானே உனக்கு கோவில்தான் கட்டணும்.. துப்பாத குறையாக திட்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை: அனிதா சம்பத் பேசினாலே எரிச்சலாய் வருவதாக திட்டி தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் பெசய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அன்றே தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார். சுரேஷிடம் வெட்டியாக சண்டை போட்டு இருந்த பெயரையெல்லாம் கெடுத்துக் கொண்டார்.

மொத்தமாக டேமேஜ்
புரமோவில் வரவேண்டும் என்பதற்காகவே ஏதாவது ஒரு வேலையை செய்து வருகிறார். முதல் வாரம் முழுக்க சுரேஷ் சக்ரவர்த்தியை சீண்டி வம்பிழுத்துவிட்டு, அவர் தன்னிடம் பிரச்சனை செய்வது போன்று பேசி வருவதாக கூறி, மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார்.

என் மேல் தப்பேயில்லை
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தான் நடந்து கொண்ட விதம் சரிதான் என சனம் ஷெட்டியிடம் பேசினார் அனிதா சம்பத். அது தவறாக இருந்திருந்தால் கமல் தன்னை கண்டித்திருப்பார். ஆனால் என் மேல் தவறு இல்லை என்றார். சனமும் அதற்கு ஆமாம் என ஜால்ரா போட்டார்.

கழுவி ஊற்றியுள்ளனர்
இதனை பார்த்த நெட்டிசன்கள் அனிதா சம்பத்தை கழுவி ஊற்றியுள்ளனர். நீயெல்லாம் திருந்தவே மாட்டிய என கேட்டுள்ளனர். இரண்டு நாட்கள் அமைதியாய் இருந்தாய் மீண்டும் ஆரம்பித்து விட்டாயா என விளாசியிருக்கின்றனர்.

ரொம்ப வருத்தப்படுவ..
அனிதா சம்பத் நீ இன்னும் திருந்தல.. நீ பண்ணுனது கரெக்ட்டான்னு கன்ஃபியூஷன் வேற.. நீ அப்படியே இரு.. வெளில வந்து ரொம்ப வருத்தப்படுவ.. ரொம்ப இரிட்டேட்டிங்கா இருக்கு.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஜூலி ஞாபகம் வருது
மற்றொரு நெட்டிசனான இவர் அனிதா சம்பத்தை பார்க்கும் போது ஜூலி ஞாபகம் தான் வருது.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

எரிச்சலாக்குகிறார்
கமல்ஹாசன் சொன்னதை போல் அழு மூஞ்சி அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிலேயே ரொம்ப கான்ஷியஸான ஆள்.. அதிக எரிச்சலை ஏற்படுத்தும் ஆளும் அவர்தான் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஏத்திவிடறாங்க
அம்மா அனிதா சம்பத் 3 விஷயத்துக்கு பேசுன பேச்சே காதுல ரத்தம் வந்திருச்சு! 27 ஆ? அவைங்க நீ புரோமா கன்டென்ட் கொடுக்கிறனு ஒன்னும் சொல்லாம ஏத்திவிடறாங்க! நீ வெளில வா அது தான் உனக்கு நல்லது! என்று எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஒரே விஷயத்தை பேசி கொல்றா
எனக்கு இந்த அனிதா சம்பத்த பார்த்தா மைனா படம் இன்ஸ்பெக்டர் வொய்ஃப் ஞாபகம் வரது எனக்கு மட்டும்தானா.. ஒரே விஷயத்த பேசியே கொல்றா என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நம்ம தப்பிச்சோம்
அனிதா சம்பத் 30ல 27 விட்டுட்டு 3க்குதான் கோவப்பட்டு இருக்காங்களாம்.. நல்ல வேலை.. நம்ம தப்பிச்சோம்.. என்னம்மா நீ இப்படி பண்றீயேம்மா.. மொதல்ல உன்ன தூக்கனும்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

புருஷனுக்கு சல்யூட் பண்ணனும்
அனிதா கணவர எனக்கு பார்க்கனும் போல இருக்கு.. பார்த்து ஒரு சல்யூட் பண்ணனும்.. என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

கடுப்பாவது ப்ளீஸ்
அனிதா சம்பத் இன்னும் வேற நீங்க கோப படனுமா?
என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க. தயவு செய்து நீள நீளமா பேசாதீங்க. கடுப்பாவது ப்ளீஸ்... என திட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கோவில் தான் கட்டனும்
எப்பா அனிதாவ கட்டின புண்ணியவானே உனக்கு கோவில் தாண்டா கட்டணும். ஒரு 5 நிமிஷம் அவ பேசுறத எங்களால கேக்க முடியல, நீ எப்படி தான் அவளை சமாளிக்கிறியோ.. திறமையான பெண்.. ஆனால் ரொம்ப கேவலமான ஆட்டியூட் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











