Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நடிகை ஆபாச பட விவகாரம்.. மிரட்டி நடிக்க வைத்தார்.. பிரபல மாடல் பரபரப்பு புகார்.. 9 பேர் கைது!
மும்பை: ஆபாச படம் எடுத்தது தொடர்பாக நடிகை கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தன்னை மிரட்டி நடிக்க வைத்ததாக, பிரபல மாடல் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழில் வெளியான 'பேய்கள் ஜாக்கிரதை' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், இந்தி நடிகை கெஹனா வசிஸ்த்.
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இணையதளம்
இப்போது, இந்தி டிவி சீரியல்கள் மற்றும் பல வெப் தொடர்களில் நடித்து வருகிறார். மிஸ் ஆசிய பிகினி டைட்டிலை வென்ற கெஹனா, பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், பணம் கட்டி பார்க்கும் இணையதளம் ஒன்றை தொடங்கி, அதில் ஆபாச படங்களைப் பதிவேற்றி உள்ளார்.
பங்களாவில் சோதனை
இதற்கு ரூ.2000 கட்டணம் செலுத்தி சந்தாதாரர் ஆகவேண்டும். இதில் ஏராளமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அவர்களுக்காக, சிலருடன் இணைந்து ஆபாச படங்களை தயாரித்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மும்பை மலாட்- மல்வானி பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் சோதனை நடத்தினர்.
கெஹனா வசிஸ்த்
அப்போது, அங்கு தனி அறையில் ஆபாச படம் எடுப்பது தெரியவந்ததை அடுத்து கெஹனா வசிஸ்த்தை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த நடிகர்கள், ஒரு பெண் புகைப்படக் கலைஞர், டிசைனர் ஆகியோரையும் கைது செய்தனர். இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். இந்நிலையில் மாடல் ஒருவர், தன்னை மிரட்டி, ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக பரபரப்பு புகார் அளித்தார்.
21 வயது மாடல்
ஜார்க்கண்டில் நடந்த அழகி போட்டியில் வென்ற 21 வயது மாடல் அவர். மும்பையில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி வந்தார். அவரை ஓ.டி.டிக்காக எடுக்கப்படும் படங்களில் நடிக்க வைப்பதாக சிலர் நம்ப வைத்தனர். பின்னர் அவரை மிரட்டி, ஆபாச படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இதுதொடர்பாக அவர் மும்பை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
ஆபாச காட்சியில்
அதில் அவர், யாஷ்மின் ரோவா கான் என்ற பெண், ஓ.டி.டியில் நடிக்க வைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார். பின்னர் ஆபாச படத்தில் நடிக்கக் கட்டாயப்படுத்தியதால் அதிர்ச்சி அடைந்தேன். அதற்கு மறுத்ததும் போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டினார். பின்னர் ஆபாச காட்சியில் நடிக்க வைத்தனர். யாஷ்மின் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
9 பேர் கைது
இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுபோன்று மிரட்டி ஆபாச படம் எடுத்ததாக யாஷின் ரோவா கான் என்பவர் மீது, முன்று பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். இந் நிலையில், இந்த வழக்கில், ஆபாச படங்களை இயக்கிய தன்வீர் ஹாஷ்மி, யாஷின், அவர் கணவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.