Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திருவாரூரில் காஞ்சனா, கருங்காலி பட சிடிக்களை விற்றவர் கைது
திருவாரூர்: திருவாரூரில் காஞ்சனா, கருங்காலி போன்ற புதிய திரைப்பட டிசி-க்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் காட்டூர் கீழத் தெருவை சேர்ந்தவர் சந்தானம் மகன் பாலகுருசாமி(38). இவர் திருவாரூர் பஸ் நிலையத்தில் வீடியோ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புதுப்பட சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவாரூர் நகர போலீசார், பாலகுருசாமியின் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி திருட்டுத்தனமாக புதிய பட டிவிடி-க்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
பாலகுருசாமியை கைது செய்த போலீசார், அவரது கடையில் இருந்த காஞ்சனா, கருங்காலி உள்பட 20க்கும் மேற்பட்ட புதுப்பட சிடிக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் போலீஸ் சோதனைக்கு பயந்து திருவாரூரில் வீடியோ கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தது.