Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கே பாலச்சந்தர் பெயரில் திரையரங்கம்.. இயக்குநர் சங்கத்தில் திறப்பு
தமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் கே பாலச்சந்தர் பெயரில் திரையரங்கம் இன்று திறக்கப்பட்டது.
உதவி இயக்குநர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட் செய்வதற்கும் இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திரையரங்கிற்கு இயக்குநர் பாலச்சந்தரின் நினைவாக 'இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அரங்கம்' என்று பெயர் சூட்டப் பட்டு. இயக்குனர் பாரதிராஜாவால் இன்று திறக்கப்பட்டது.
நாற்பது உதவி இயக்குநர்கள் குறும்படங்களை இயக்கி உள்ளார்கள். அதில் இரண்டு குறும்படங்கள் இன்று திரையிடப்பட்டன. இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்று அவற்றின் இயக்குநர்களை பாரதிராஜா பாராட்டினார்.
'பாலசந்தர் தமிழ் திரையுலகில் பல வெற்றிகளைக் கண்டவர். பல சாதனைகளைப் பதிவு செய்தவர். அவரைப் போலவே இளம் இயக்குநர்களும், நாளைய இயக்குநர்களும் தங்களது சாதனைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை' என்றார் பாரதிராஜா.
விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி .வாசு,கே. பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குறும்படங்களை இயக்கிய உதவி இயக்குநர்களை பாராட்டிப் பேசினார்கள்.
சங்கத்தின் தமிழ் வெள்ளித் திரை என்ற இணையதளத்தை கே.பாக்யராஜ் துவைக்கி வைத்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைபுலி. எஸ்.தாணு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா இருவரை பற்றிய குறும்படங்களை துவைக்கி வைத்தார்.
சங்கத்தின் தலைவர் விக்ரமன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார்.