Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மலேசியா...சென்னை சினிமா பைனான்சியர்...கதி என்ன?
சென்னை: மலேசியாவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் உயிரோடு இருப்பதாகவும், அவர் உறவினர்களால் சிறை வைக்கப்பட்டு்ள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா பைனான்சியரான முத்துராஜா (38) சென்னை ராமபுரத்தில் வசித்து வந்தார். நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டத் தலைவராகவும் இருந்து வந்தார்.
மலேசியாவில் உள்ள தனது சகோதரர்களான சுரேந்தர், பத்மநாபன் ஆகியோரை சந்திக்க சமீபத்தில் அங்கு சென்றார்.
ஆனால், நாடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி உஷாராணி மலேசியா சென்று போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே முத்துராஜா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், முத்துராஜா கொலை செய்யப்படவில்லை என்றும், மலேடசியாவி்ல் உள்ள அவரது உறவினர்கள் அவரைக் கடத்தி வைத்துள்ளதாகவும் எனவும் முத்துராஜாவின் மனைவி உஷாராணி கூறினார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உஷாராணி முத்துராஜாவின் 2வது மனைவி என்றும், முத்துராஜாவுக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருப்பதும் தெரியவந்தது.
ராமலட்சுமி செங்கோட்டையில் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். அவர் கூறுகையில்,
முத்துராஜாவுக்கும் எனக்கும் கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது.
அவர் தொழில் விஷயமாக பல நாடுகளுக்கு சென்று வருவார். எங்கு செல்கிறார் என்பதை என்னிடம் கூறமாட்டார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று எனது கணவரை கடைசியாக பார்த்தேன். பிறகு சென்னை சென்றவர் அதன் பிறகு வரவே இல்லை.
அவர் மலேசியாவில் இருப்பதாகவும், உஷாராணி என்ற காதலி இருப்பதாகவும் சிலர் கூறினார்கள். இந் நிலையில் எனது கணவர் முத்துராஜா கொலை செய்யப்பட்டதாக பத்திரிக்கைகளில் தான் செய்தியைப் பார்த்தேன்.
ஆனால், அவர் கொலை செய்யப்படவில்லை. உயிரோடுதான் இருக்கிறார் என்று மாமனார் கூறியுளளார். எனவே எனது கணவரை கண்டுபிடித்து தருமாறு முதல்வர் கருணாநிதிக்கு மனு அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி