Don't Miss!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- News விரல் நகத்தை வச்சே.. உங்களுக்குள் மறைந்து இருக்கும் கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்.. ரெடியா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மே 31ல் வெளியாகும் என்.ஜி.கே.: சூர்யா ரசிகர்களை இனி கையில் பிடிக்க முடியாது
சென்னை: என்.ஜி.கே. படம் வரும் மே மாதம் 31ம் தேதி ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அறிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. பட ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனதால் ரசிகர்கள் கடுப்பானார்கள்.
மேலும் படம் குறித்து அப்டேட் எதுவும் கிடைக்காமல் இருந்ததால் சூர்யா ரசிகர்கள் கோபம் அடைந்தனர். இந்நிலையில் என்.ஜி.கே. படம் வரும் மே மாதம் 31ம் தேதி ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Nerkonda parvai: அஜித்தின் நேர்கொண்ட பார்வை... ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!
ஒரு அப்டேட் கிடைக்காதா என்று ஏங்கியவர்களுக்கு ரிலீஸ் தேதி தெரிந்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
#NGKfromMay31 worldwide✌🏼
— S.R.Prabhu (@prabhu_sr) March 25, 2019
முன்னதாக கடந்த 22ம் தேதி சூர்யா என்.ஜி.கே. பட டப்பிங் பணியை துவங்கினார். அது குறித்த புகைப்படத்தை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு ரிலீஸ் விபரம் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்றார். நல்ல வேளையாக இழுத்தடிக்காமல் சீக்கிரமே அறிவித்துவிட்டார்.
எஸ்.ஆர். பிரபு ட்வீட் செய்த வேகத்தில் #NGKfromMay31 என்ற ஹேஷ்டேகுடன் சூர்யா ரசிகர்கள் ட்வீட் செய்யத் துவங்கிவிட்டனர்.