நடிகை, சிங்கிள் என்பதால் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹீரோயின்
மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் பட நாயகி நிதி அகர்வால் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடிகைகளுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டமாக உள்ளது. அனைவராலும் காசு கொடுத்து சொந்த வீடு வாங்கவும் முடியாது.
இந்நிலையில் தான் நடிகை நிதி அகர்வாலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நிதி
மும்பை பந்த்ரா பகுதியில் தோழியுடன் தங்கி வந்துள்ளார் நிதி அகர்வால். அவர் நடிகை என்பதாலும், திருமணமாகாதவர் என்பதால் வீட்டை காலி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

நடிகைகள்
பாலிவுட்டில் நடிகையாகும் கனவோடு பல பெண்கள் மும்பை வருகிறார்கள். ஆனால் தங்க வீடு கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். சினிமாக்காரர்களுக்கு வீடு தர பலர் தயாராக இல்லை.

வீடு
நடிகைகள் அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நடிகைககளுக்கு வாடகைக்கு வீடு தர யாரும் தயாராக இல்லை. வளர்ந்து வரும் நடிகைகள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக பலரும் நம்புகிறார்கள்.

மதம்
நடிகை என்பதை தாண்டி வீடு கொடுக்காமல் இருக்க மதமும் ஒரு காரணமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மும்பையில் வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











