Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இரவுக் காட்சி விவகாரம் - திரையரங்க உரிமையாளர்களுக்குள் 'குடுமிப்பிடி'!
கூட்டம் குறைவு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இரவுக்காட்சி ரத்து செய்யப்படுவதாக அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மற்றொரு அமைப்பான தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம்.
இதுகுறித்து அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளபோது காலை 10 மணியில் இருந்து இரவு 1 மணிக்குள் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்று நமது சங்கம் தமிழக அரசை கோரி வருகிறது.
இதன் மூலம் ஒரே நாளில் ஒரே திரையரங்கில் 2 படங்களை திரையிட்டு ரிலீசாகாமல் தேங்கிக் கிடக்கும் பல சிறிய திரைப்படங்களை வெளியிட்டு, அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எங்களது சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், எங்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட அபிராமி ராமநாதன், தமிழகத்தில் இரவு காட்சிகள் ரத்து என்ற தவறான தகவலை மக்களுக்கு மத்தியில் பரப்பி, ஒரு தேவையில்லாத அச்ச உணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்.
திரையரங்குகளில் இரவுக் காட்சிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஐ.டி. செக்டாரில் பணிபுரியும் பல பெண்கள் நள்ளிரவில்கூட நல்ல பாதுகாப்போடுதான் சென்று வருகின்றார்கள் என்று அனைவருக்கும் நன்கு தெரியும்.
தமிழகத்தில் அனைத்துத் திரையரங்குகளிலும் இரவு காட்சிகள் வழக்கம் போல் செயல்படும் என்பதனை இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.