Don't Miss!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
லாக்டவுனில்...மக்களுக்கு சேவை செய்ய, கால் சென்டரில் இணைந்த சசிகுமார் ஹீரோயின்! பாராட்டும் ஃபேன்ஸ்
கண்ணூர்: லாக்டவுன் நேரத்தில் சேவை செய்வதற்காக, கார்த்தி பட நடிகை கால் சென்டரில் தன்னார்வலராக இணைந்துள்ளார்.
Recommended Video
சத்யன் அந்திக்காடு இயக்கிய பாக்யதேவதா என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிலா விமல்.
சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் மியா, பிரபு, விஜி சந்திரசேகரன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
அமலா பாலா.. ஜுவாலா கட்டாவா.. விஷ்ணு விஷால் விவாகரத்துக்கு யார் காரணம்?
கிடாரி, தம்பி
நிகிலா விமலின் நடிப்பு, இந்தப் படத்தில் பாராட்டப்பட்டதை அடுத்து, பிரசாத் இயக்கிய கிடாரி படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதிலும் சசிகுமார் ஹீரோவாக நடித்தார். வேல ராம மூர்த்தி, வசுமித்ர உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து பஞ்சுமிட்டாய், கார்த்தியின் தம்பி படங்களில் நடித்துள்ளார் நிகிலா.
கொரோனா வைரஸ்
இப்போது சிபி சத்யராஜ் நடித்துள்ள ரங்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கு
நாள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப் படுகிறது. இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தன்னார்வலர்கள்
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விருப்பமுள்ளவர்கள் தன்னார்வலராக வந்து சேவை செய்யலாம் என்று கேரள அரசு அறிவித்திருந்தது. நிகிலா விமல் இதில் சேர விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து கண்ணூரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து கால்சென்டரில் இணைந்துள்ளார். மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைக்கும் கால்சென்டர் இது. இதையடுத்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.