Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ50 லட்சம் மோசடி… ஓட்டல் உரிமையாளர் மீது நிக்கி கல்ராணி புகார் !
சென்னை : நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் ரூ50 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் கூறியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி.
மிஸ்சான தளபதி 65.. பான் இந்தியா படத்தை கையில் எடுத்த ஏ.ஆர். முருகதாஸ்.. டைட்டில் என்ன தெரியுமா?
இவர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
போதைப்பொருள் வழக்கில்
நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புகார் மனு
நிக்கி கல்ராணியின் குடும்பத்தினர் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீது ஒரு புகார் அளித்துள்ளார்.
ரூ50லட்சத்தி
2016ம் ஆண்டு கோரமங்களா பகுதியில் ஓட்டலில் ரூ.50 லட்சம் முதலீடு செய்திருந்தேன். இதற்காக மாதம் ஒரு லட்சம் கொடுப்பதாக அந்த ஓட்டலில் உரிமையாளர் நிகில் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நிகில் எந்த பணத்தையும் தரவில்லை. மாறாக என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுபற்றி பலமுறை நிகிலிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
Recommended Video
சட்டப்படி நடவடிக்கை
என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் நிகில் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.