Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அதுக்குள்ள இவ்ளோ வருஷமாயிடுச்சா? சினிமாவில் 7 வருஷம்.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரபல நடிகை!
சென்னை: சினிமாவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆனதை ஒட்டி, பிரபல நடிகை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை நிக்கி கல்ராணி, கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர். தமிழில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக டார்லிங் படம் மூலம் அறிமுகமானார்.
இந்த ஹாரர், காமெடி படம் கவனிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.
கடவுள் இருக்கான்
பிறகு, யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 உட்பட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் 1983 என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர்.
சஞ்சனா கல்ராணி
தொடர்ந்து மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் நடித்து வருகிறார். தமிழில் அறிமுகமாக இருக்கிறார். போதைப் பொருள் வழக்கில் கைதான சஞ்சனா, சிறையில் இருந்துவிட்டு, கடந்த மாதம்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
ரசிகர்களுக்கு நன்றி
நடிகை நிக்கி கல்ராணியும் நடிகர் 'மிருகம்' ஆதியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிக்கி, சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில், இவர் சினிமாவுக்கு வந்து ஏழு வருடம் ஆனதை ஒட்டி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அற்புதமான
இதுபற்றி அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியிருக்கிறார். அதில் தனது சினிமா கேரக்டர்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், சினிமா துறைக்கு வந்து அற்புதமான ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. பல்வேறு பாத்திரங்கள், சிரிப்பு, நாடகம் இன்னும் பல்வேறு கேரக்டர்களை ஏற்றுள்ளேன்.
ஆதரவும் அன்பும்
உங்கள் ஒவ்வொருவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் ஆதரவும் அன்பும் இல்லை என்றால் நான் இங்கு இருக்க வாய்ப்பில்லை. நான் இப்போது இருக்கும் இடத்தை தந்த உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மொட்ட சிவா
ஒருவர், அதுக்குள்ள ஏழு வருஷம் ஆயிடுச்சா? என்று ஆச்சரியமாக கேட்டுள்ளார். இன்னொரு கலாய் ரசிகர், நீங்க பண்ணுனதிலேயே, மொட்ட சிவா கெட்ட சிவாதான் பெரிய சம்பவம் என்று தெரிவித்துள்ளார். பலர், இன்னும் நல்ல கேரக்டர்களில் நடிங்க என்று அட்வைஸ் செய்துள்ளனர்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்