Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை நிர்மலா சரண்
சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மனோகரனி மருமகள் தற்கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த டிவி நடிகை நிர்மலா இன்று நீதிமன்றத்தில சரணடைந்தார்.
மனோகரனின் மகன் நவீன்குமாரின் மனைவி மதுதேவி கடந்த 2ம் தேதி தூக்குப் போட்டு தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதத்தில், கணவர் நவீன் குமாருக்கு டிவி நடிகைநிர்மலாவுடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் தன்னுடன் கணவர் சரிவர குடும்பம் நடத்தவில்லை என்றும்குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அடையார் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி மதுதேவியின் கணவர்நவீன்குமாரை கைது செய்தனர்.
அவர் நிர்மலாவுடனான கள்ளத் தொடர்பை ஒப்புக்கொண்டார்.
நிர்மலா, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அங்குபோலீசார் அவரை விசாரிக்க சென்றபோது தலைமறைவாகி விட்டார்.
அவரது வீட்டில் இருந்து மதுதேவியின் நகைகளையும், நவீன்குமார் கொடுத்து பணத்தையும் போலீசார்கைப்பற்றினர். இந் நிலையில் மனோகரன், கனகவல்லி, உமா, நடிகை நிர்மலா ஆகியோர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் இன்று காலை 10.45 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்தார் நிர்மலா. பர்தாஅணிந்தபடி காரிலிருந்து இறங்கிய அவர் நீதிமன்றத்துக்குள் சென்றார். நீதிபதி அருணாசலம் முன் சரணடைந்தஅவரது சார்பில் வழக்கறிஞர் முத்தழகன் சரண் அடையும் மனுவை கொடுத்தார்.
பர்தாவில் கோர்ட்டுக்கு வந்த நிர்மலா |
அதை பெற்றுக் கொண்டு நீதிபதி, சரண் அடையும் மனுக்களை 10.30 மணிக்குள் கொடுக்க வேண்டும். நீங்கள்தாமதமாக வந்திருக்கிறீர்களே என்றார். என்றாலும் சரண் அடையும் மனுவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தநீதிபதி விராணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தார்.
பிற்பகல் 3 மணிக்கு மேல் மனு மீதான விசாரணை நடைபெறும். அதுவரை நடிகை நிர்மலா நீதிமன்றத்தில் இருந்துஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் நீதிபதி.
இதற்கிடையே நவீன்குமார் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தனக்கு நிர்மலா நல்ல செக்ஸ்ஒத்துழைப்பும், மகிழ்ச்சியையும் தந்ததாகவும் அதனால் தான் அவரிடமே தன்னை ஒப்படைத்ததாகவும் பணம்,நகைகள் தந்தாகவும் கூறியுள்ளார்.