Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அபிஷேக்கை தலைகீழாக தொங்க விட்ட நிரூப்...எதுக்குன்னு நீங்களே பாருங்க
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் எட்டாவது வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதற்காக பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாறியது. ஆசிரியர்கள், மாணவர்கள் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர்.
கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்
வார்டனாக சிபி, ஆசிரியர்களாக ராஜு, அபிஷேக், அமீர் ஆகியோர் செயல்பட்டனர். மாணவர்களாக பிரியங்கா, நிரூப், பாவ்னி, தாமரை, ஐக்கி, இமான் அண்ணாச்சி, வருண், அபினய் ஆகியோர் யூனிஃபார்ம் அணிந்து விளையாடினர்.
சிபி – பிரியங்கா சண்டை
கண்டிப்பான வார்டனாக இருந்த மாணவர்களை மிகவும் அடக்கி வைக்கிறார். அதிகம் சேட்டை செய்யும் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கிறார். தண்டனைகளை ஏற்க முடியாது என கூறி முதல் நாளில் சிபியுடன் சண்டை போடுகிறார் பிரியங்கா. அதற்கு தண்டனையாக வீட்டிற்கு வெளியே சென்று தூங்க வைக்கப்படுகிறார்.
சிபி – அக்ஷரா சண்டை
டாஸ்கின் இரண்டாவது நாளில் சிபியிடம் ஆக்ரோஷமாக கத்தி, பொருட்களை உடைத்து, தன்னை தானே தாக்கி மோசமாக நடந்து கொள்கிறார் அக்ஷரா. பிறகு பிக்பாஸ் கூப்பிட்டு கண்டித்ததும் கதறி கதறி அழுகிறார். பிறகு தானே சமாதானம் ஆகி டாஸ்க்கில் தொடர்ந்து பங்கேற்கிறார்.
ஆசிரியர்களை உதைக்கும் மாணவர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 53 வது நாளான இன்றுடன் போர்டிங் ஸ்கூல் முடிவதாக பிக்பாஸ் அறிவித்தார். இதனையடுத்து டாஸ்க் முடிந்ததும் ஆசிரியர்களாக செயல்பட்ட சிபி, ராஜு, அமீர் ஆகியோரை சேரில் கை, கால்களை கட்டி வைத்து, பவுடர், தண்ணீர் ஆகியவற்றை கொட்டி, அடித்து உடைக்கிறார்கள் மாணவர்களாக இருந்த போட்டியாளர்கள் அனைவரும்.
வார்டனுக்கு இந்த நிலைமையா
ராஜுவை சேரோடு கட்டி வைத்து விட்டு, அவருக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். சிபியை பெண் போட்டியாளர்களை கையை பின்னால் கட்டி அடித்து உதைத்து, இழுத்து வருகிறார்கள். தாமரை உண்மையாகவே அவரை அடிக்கிறார். ஒரு வார்டனுக்கு இந்த நிலையா என பரிதாபமாக கேட்கிறார் சிபி.
தலைகீழாக தொங்க விடப்பட்ட அபிஷேக்
இவர்கள் மூன்று பேருக்கும் நடப்பதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அபிஷேக். அவரை தலைகீழாக தூக்கி வருகிறார் நிரூப். தலைகீழாகவே கொண்டு வந்து அவரையும் சேரில் அமர வைத்து, தண்டனை கொடுக்கிறார்கள் மாணவர்களாக இருந்து கஷ்டங்களை அனுபவித்த மற்ற போட்டியாளர்கள்.