Don't Miss!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- News சிறைக்குள் "பலே பிளான் போட்டு" மாம்பழங்களை அதிகம் சாப்பிடுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அபிஷேக்கை தலைகீழாக தொங்க விட்ட நிரூப்...எதுக்குன்னு நீங்களே பாருங்க
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் எட்டாவது வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதற்காக பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாறியது. ஆசிரியர்கள், மாணவர்கள் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர்.
கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்
வார்டனாக சிபி, ஆசிரியர்களாக ராஜு, அபிஷேக், அமீர் ஆகியோர் செயல்பட்டனர். மாணவர்களாக பிரியங்கா, நிரூப், பாவ்னி, தாமரை, ஐக்கி, இமான் அண்ணாச்சி, வருண், அபினய் ஆகியோர் யூனிஃபார்ம் அணிந்து விளையாடினர்.
சிபி – பிரியங்கா சண்டை
கண்டிப்பான வார்டனாக இருந்த மாணவர்களை மிகவும் அடக்கி வைக்கிறார். அதிகம் சேட்டை செய்யும் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கிறார். தண்டனைகளை ஏற்க முடியாது என கூறி முதல் நாளில் சிபியுடன் சண்டை போடுகிறார் பிரியங்கா. அதற்கு தண்டனையாக வீட்டிற்கு வெளியே சென்று தூங்க வைக்கப்படுகிறார்.
சிபி – அக்ஷரா சண்டை
டாஸ்கின் இரண்டாவது நாளில் சிபியிடம் ஆக்ரோஷமாக கத்தி, பொருட்களை உடைத்து, தன்னை தானே தாக்கி மோசமாக நடந்து கொள்கிறார் அக்ஷரா. பிறகு பிக்பாஸ் கூப்பிட்டு கண்டித்ததும் கதறி கதறி அழுகிறார். பிறகு தானே சமாதானம் ஆகி டாஸ்க்கில் தொடர்ந்து பங்கேற்கிறார்.
ஆசிரியர்களை உதைக்கும் மாணவர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 53 வது நாளான இன்றுடன் போர்டிங் ஸ்கூல் முடிவதாக பிக்பாஸ் அறிவித்தார். இதனையடுத்து டாஸ்க் முடிந்ததும் ஆசிரியர்களாக செயல்பட்ட சிபி, ராஜு, அமீர் ஆகியோரை சேரில் கை, கால்களை கட்டி வைத்து, பவுடர், தண்ணீர் ஆகியவற்றை கொட்டி, அடித்து உடைக்கிறார்கள் மாணவர்களாக இருந்த போட்டியாளர்கள் அனைவரும்.
வார்டனுக்கு இந்த நிலைமையா
ராஜுவை சேரோடு கட்டி வைத்து விட்டு, அவருக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். சிபியை பெண் போட்டியாளர்களை கையை பின்னால் கட்டி அடித்து உதைத்து, இழுத்து வருகிறார்கள். தாமரை உண்மையாகவே அவரை அடிக்கிறார். ஒரு வார்டனுக்கு இந்த நிலையா என பரிதாபமாக கேட்கிறார் சிபி.
தலைகீழாக தொங்க விடப்பட்ட அபிஷேக்
இவர்கள் மூன்று பேருக்கும் நடப்பதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அபிஷேக். அவரை தலைகீழாக தூக்கி வருகிறார் நிரூப். தலைகீழாகவே கொண்டு வந்து அவரையும் சேரில் அமர வைத்து, தண்டனை கொடுக்கிறார்கள் மாணவர்களாக இருந்து கஷ்டங்களை அனுபவித்த மற்ற போட்டியாளர்கள்.