twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உன் பாயிண்ட் என்ன...நிரூப்புடன் சண்டை போடும் பிரியங்கா, அபிநய்

    |

    சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. இதுவரை 5 பேர் வெளியேறி உள்ளனர்.

    பெண்களின் வலியை கூறிய மிக மிக அவசரம்... 2 ஆண்டு கொண்டாட்டத்தில் படக்குழு பெண்களின் வலியை கூறிய மிக மிக அவசரம்... 2 ஆண்டு கொண்டாட்டத்தில் படக்குழு

    நமிதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்னபொண்ணு ஆகியோரைத் தொடர்ந்து நேற்று சுருதி வெளியேறி உள்ளார். அவர் தாமரையிடம் இருந்து திருடிய காயினை இனி பயன்படுத்த முடியாது எனக் கூறி, பிக்பாஸ் நினைவாக அந்த காயினை அவரே வைத்துக் கொள்ள கமல் கூறி விட்டார்.

    ப்ரோமோ வந்தாச்சு

    ப்ரோமோ வந்தாச்சு

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 36 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் மற்றும் வரும் வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டது.

    அழுது புலம்பும் அக்ஷரா

    அழுது புலம்பும் அக்ஷரா

    இதில், யார் கேப்டனாக இருக்க வேண்டாம் என நினைக்கிறீர்களோ அவர்களின் ஃபோட்டோ பொருத்தப்பட்டுள்ள பொம்மையின் தலையில் கவிழ்க்கப்பட்டுள்ள மண்பானையை உடைக்க வேண்டும் என பிக்பாஸ் கூறி இருந்தார். இது நடந்து கொண்டிருக்கும் போது அக்ஷரா, தான் கேப்டன் ஆக வேண்டும் என பேசுகிறார். அதை ஏற்காமல் சிபி அவரின் ஃபோட்டோ வைக்கப்பட்ட பொம்மையின் தலையை உடைக்கிறார். இதனால் வருணிடம் சொல்லி புலம்பி, அழுகிறார் அக்ஷரா.

    நிரூப் - பிரியங்கா மோதல்

    நிரூப் - பிரியங்கா மோதல்

    இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், நீ உனக்காக கேம் ஆட தானே வந்தாய். எதற்காக அனைவரை பற்றியும் சொல்லி நீ உன்னை நல்லவளாக காட்டிக் கொள்கிறாய் என பிரியங்காவிடம் விவாதிக்கிறார் நிரூப். அதற்கு பிரியங்கா, நீ உன்னுடைய பாயிண்டை பேசு. மற்றவர்கள் பேசுவதை வைத்து பேசாதே என்கிறார். பிரியங்கா சொன்னதை போல் அபிநய்யும், அவன் எப்போது தன்னுடைய சொந்த பாயிண்ட்டை பேசுவதில்லை என பேசிக் கொண்டிருக்கிறார்.

    அபிநய் - நிரூப் வாக்குவாதம்

    அபிநய் - நிரூப் வாக்குவாதம்

    இதனால் நிரூப், பிரியங்கா மற்றும் அபிநய்யிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது பிரியங்கா, நான் பேசும் பாயிண்டை மட்டும் கமெண்ட் செய்கிறாயே தவிர அதில் உன் பாயிண்ட் எங்கே இருக்கு என நிரூப்பை கேள்வி கேட்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்து போகிறார் நிரூப். இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு, நெட்டிசன்கள் கடுப்பாகி கமெண்ட் செய்துள்ளனர்.

    சென்னையே தண்ணியில மிதக்குது

    சென்னையே தண்ணியில மிதக்குது

    இங்க சண்டை போட்டுட்டு இருக்கீங்க, ஏரிய திறந்துட்டாங்க. வெள்ளம் வர போகுது. எல்லோரும் மூட்ட முடிச்ச கட்டிட்டு வீட்டு பக்கம் கிளம்புங்க என பலர் கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர், சென்னையில் பாதி ஏரியா தண்ணியில மூழ்கிடுச்சு. அதெப்படி பிக்பாஸ் வீட்டுள்ள மட்டும் இன்னும் தண்ணீர் போகல என கேள்வி கேட்டு கலாய்த்துள்ளனர். இந்த வாரம் பிரியங்கா வெர்சஸ் நிரூப் வாரமா என சிலர் கிண்டலாக கேட்டுள்ளனர்.

    English summary
    In bigg boss tamil season 5 second promo for today episode shows that niroop argue with priyanka and abinay. priyanka questioned niroop that why he didn't speak on his own point. after watching this promo fans commented that flood lashes all over chennai but these people are quarrelling over there.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X