டஃப் போட்டியாளர் அபிஷேக் தான் … குழப்பத்தில் இருக்கும் நிரூப்… உசுப்பேத்தும் கமல் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் நிரூப்பை டஃப் போட்டியாளர் என்று கூறியுள்ள நிலையில் , நிரூப் அபிஷேக்கை டஃப் போட்டியாளர் என்று கூறியுள்ளார்.
டிக்கெட்டு ஃபினாலே டாஸ்கில் விளையாடாமலே நிரூப் வெளியேற்றப்பட்டார்.
பிசிக்கல் டாஸ்கில் எப்போதும் ஆவமுடன் விளையாடும் நிரூப் டிக்கெட் பினாலே டாஸ்கில் இல்லாதது ரசிகர்களுக்கும் ஒருவித ஏமாற்றமாகவே இருந்தது

நிரூப்
நேற்றை எபிசோடில் டின்னர் டாஸ்க்கை பற்றி விசாரித்த கமல், நிரூப் இப்படி ஈஸியா வெளியே வந்துடுவாருன்னு நான் நெனக்கவில்லை என்றார். மேலும், நிரூப்பை பார்த்து பலரும் பயந்தார்கள் என்று நிரூப்பை உசுப்பிவிட்டார் கமல்

பயமா இருக்கு
இதையடுத்து பேசி நிரூப், இந்த டாஸ்கிலிருந்து நான் விலகுவதற்கு முக்கிய காரணம் பிரியங்கா தான், அவர் தான் உன் கூட விளையாட பயமா இருக்குன்னு எனற் காரணத்தைச் சொல்லி என்னை வெளியே அனுப்பினார். விளையாட்டில் யாரும் யாரும் விட்டு கொடுக்கக்கூடாது ஆனால், முட்டை டாஸ்கில் தாமரை, பாவனி இருவர் மட்டுமே தனியா விளையாடினார்கள் . ஆனால் மற்றவர்கள் அனைவரும் குரூப் சேர்ந்து விளையாடினார்கள்.

ராஜூவின் யுக்தி
அவங்க அவங்க விளையாட்டை தனித்தனியாக விளையாடுங்கனு நான் மட்டும்தான் சொல்லிக்கிட்டே இருந்தேன் என்றார். விட்டுத் தருவதை ராஜு ஒரு ஸ்ட்ராட்டஜியாவே வெச்சிருக்கார் என்று நிரூப் அடுக்கடுக்கான புகார் கூறியும் சிரித்தபடியே அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த கமல், வாய்ச் சொல் வீரர். விட்டுத் தருவதும் அவரின் உத்தியா இருக்கலாம் என்றார் அப்படியே மழுப்பி விட்டார்.

குழப்பத்தில் இருக்கிறார்
இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில் கூட, பிக் பாசில் வெற்றி பெற தகுதியில்லாத நபராக ராஜுவை தான் பார்ப்பதாக நிரூப் கூறியுள்ளார். அதேபோல, டஃப் போட்டியாளராக அபிஷேக்கை நான் நினைக்கிறேன் என்று குழம்பமான பதிலை உள்ளார். இதனால், ரசிகர்கள் பலரும் நிரூப்பின் பிரச்சினையே இதுதான், அவர் தெளிவாக இருந்து இருந்தால், அவரை யாராலும் வெளியே அனுப்பி இருக்க முடியாது. அவர் குழப்பத்தில் இருப்பதுதான் அவரின் பிரச்சினைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











