ரொம்ப குத்துறாங்கடா.. எல்லாருமே பொய்யா இருக்காங்க.. ரியோவை கட்டியணைத்து கதறிய நிஷா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை எல்லாருமே குத்துறாங்க என்று கதறியழுதார் நிஷா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் நாமினேஷன் டாப்புள் கார்டுக்கான டாஸ்க் நடைபெற்றது.
இதில் நிஷா அதிக வாக்குகள் பெற்ற போதும் சனமும் அனிதாவும் விடவே முடியாது என விடாபிடியாக இருந்தனர்.

நேற்றைய எபிசோடு
ஒருக்கட்டத்தில் சனம் ஷெட்டி விட்டுக்கொடுத்த போதும் அனிதா விடாப்பிடியாக இருந்து டாப்புள் பாஸை பெற்றார். இந்நிலையில் நேற்றைய எபிசோடு அதன் தொடர்ச்சியாக இருந்தது. அதில் எல்லோரும் வெளியே சென்ற பிறகும் நிஷா மற்றும் சோம் உள்ளேயே இருந்தனர்.

கட்டிப்பிடித்து கதறல்
அப்போது வந்த ரியோ என்னாச்சு என்று கேட்டார். அதற்கு நான் ஆடியன்ஸ பார்க்கலன்னு குத்துறாங்கடா என்று ரியோவை கட்டிப்பிடித்து கதறினார். அனிதா கேம்ம முடிக்கணும்னு கொடுக்குது வேண்டாம்னு சொல்லிட்டேன்.

நீ என்ன சொல்லிக் கொடுத்த
விட்டுக்கொடுக்ற மனப்பான்மை இல்லன்னு சொல்றாங்க, ஆடியன்ஸ் மேல நம்பிக்கையில்லன்னு சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல. பாலாஜி குத்திக்கிட்டே இருக்காண்டா.. நான் உன் பின்னாடியே இருக்கேன்னு சொல்றாங்க. நீ எனக்கு என்ன சொல்லிக் கொடுத்த?

எதுவுமே பேசலன்னா..
அன்பா இருந்தா பொய்யா இருக்கேன்னு சொல்றாங்க.. எதுவுமே பேசலன்னா சேஃப் கேம் ஆடுறேன்னு சொல்றாங்க.. ரொம்ப குத்துறாங்கடா.. எல்லாம் பொய்யா இருக்காங்க.. விட்டுக்கொடுக்ற மனப்பான்மை இல்லன்னு சொல்றான். எனக்கு அது குத்துது என்று அர்ச்சனா, ரியோ மற்றும் சோமிடம் ஆவேசமாக பேசி கதறி அழுதார்.

தப்பிச்சுடுவீங்க
இதனை தொடர்ந்து ரியோ, அர்ச்சனா, சோம் மற்றும் சம்யுக்தா ஆகியோர் அவருக்கு அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர். மேலும் உங்களுக்கு உலகம் முழுக்க, ஃபேன்ஸ் இருக்காங்க, நீங்கல்லாம் தப்பிச்சுடுவீங்க என ஆறுதல் படுத்தினர்.


Click it and Unblock the Notifications











