பிக் பாஸ் வீட்டில் பேய்களின் அராஜகம்.. பயந்து போய் தேம்பி அழுத நிஷா.. உலக மகா நடிப்புடா சாமி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பேய்களின் நடமாட்டம் ஆரம்பித்துள்ளது. பேயை பார்த்து பயந்து நிஷா அரண்டு போய் அழுதார்.
நள்ளிரவிலும் தொடர்ந்த மணிக்கூண்டு டாஸ்க்கின் நடுவே, ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் கேபி ஆகியோர் பேய்களை போல வேஷம் போட்டு மற்ற போட்டியாளர்களை பயமுறுத்த கிளம்பினர்.
அன்சீன் புரமோவில் வைத்த இந்த பேய் சீனை நாம் சொன்னது போலவே, நிகழ்ச்சியிலும் வைத்து விட்டனர்.

பேய் பாஸ்
அன்சீன் புரமோவில் இடம் பெற்ற பேய் டாஸ்க் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அப்படியே இடம்பெற்றது. நள்ளிரவில் அனிதா சம்பத் தனக்கு பிக் பாஸ் கொடுத்த அறிவிப்பு கார்டை படித்துக் காட்டினார். அதன் பின்னர், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் கேபி ஆகியோர் பேய்களாக மாறினர். பிக் பாஸ் சில நேரத்திற்கு பேய் பாஸாக மாறியது.

கதறி அழுத நிஷா
பிக் பாஸ் போட்டியாளர்கள் மொத்த பேரும் ஒன்றாக வந்தாலே எதிர்த்து நின்று வூடு கட்டும் நிஷாவுக்கு, பிக் பாஸ் வீட்டில் திடீரென இத்தனை நாட்கள் இல்லாத பேய்கள் இன்று வந்ததும் அவர் அப்படியே அரண்டு போய் அழுது துடித்தார். ரியோ ராஜ் தான் பேயாக வந்து பயமுறுத்தினார் என்பது கூட நிஷாவுக்கு தெரியாதாம்.

இன்னாம்மா நடிக்குது நிஷா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவங்களை எல்லாம் சினிமாவில் பிடித்து போட்டால், அப்படி நடிப்பார்கள் போல, பேய் டாஸ்க்கை பிக் பாஸ் போட்டியாளர்களான ரம்யா, ரியொ, கேபி தான் பண்றங்கன்னு கூட தெரியாமல், பயந்து நடுங்கி அப்படி அழறங்க, அதை பார்த்த ரசிகர்கள், இன்னாம்மா நடிக்குது நிஷா, ஆவி வேஷம் போட்ட அவங்க கூட இப்படி நடிக்கலையே என கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

அன்சீன்லயே வச்சிருக்கலாம்
யாருமே பயப்பட மாட்டாங்கனு தெரிஞ்சு, அந்த டாஸ்க்கை எழுதிய மரியாதைக்காக நிஷாவை மட்டும் பயப்பட வைத்தனர். மத்தபடி பெருசா சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அந்த டாஸ்க்கில் என்ன இந்த எபிசோடிலே ஒன்றுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த நிகழ்ச்சியையும் அன்சீனாவே போட்டு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications











