வந்த வேகத்தில் போட்டுக் கொடுத்த நிஷா.. சொன்னது யார் என கொதித்த ரம்யா.. வேற லெவல் ப்ரோமோ !
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் பழைய போட்டியாளர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று அர்ச்சனா, ரேகா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வந்தது முதல் ப்ரோமோவில் தெரிய வந்தது.

என்ன நடக்க போகிறதோ?
அவர்களை பார்த்ததுமே ஆரியின் ரசிகர்கள் பதற ஆரம்பித்துவிட்டனர். என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? உள்ளே வந்துள்ள அன்பு கேங் யாரை எப்படியெல்லாம் ஏற்றி விட போகிறார்களோ என்றெல்லாம் புலம்பி தீர்த்து வருகின்றனர்.

வேலையை ஆரம்பிச்சுட்டாங்க..
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் உள்ளே வந்துள்ள பழைய போட்டியாளர்கள் தங்களின் வேலையை ஆரம்பித்துள்ளனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள ஃபைனலிஸ்ட்டுகளை ஆரத்தழுவி முத்தமிட்டனர்.

ரம்யாவிடம் சொன்ன விஷயங்கள்
தொடர்ந்து விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போடுகின்றனர். இதன் இறுதியாக ரம்யாவிடம் அர்ச்சனாவும் நிஷாவும் பேசுகின்றனர். அப்போது பேசும் நிஷா, பிக்பாஸிலிருந்து வெளியே சென்றபிறகு தனக்கு கிடைத்த எக்ஸ்பீரியன்ஸ்களை பகிர்ந்து கொள்கிறார்.

அழுதது கிளிசரீனா?
அதன்படி பிக்பாஸில் நீங்கள் சண்டை போட்டுக் கொண்டதெல்லாம் ஸ்க்ரீப்ட்டா என்று கேட்டதாகவும், நீங்கள் அழுததெல்லாம் எப்படி? கிளிசரின் ஊத்தி அழுதீங்களா? உங்களுக்குதான் சாப்பாடு வந்துருமாமே? டிரெஸெல்லாம் அயன் பண்ணி கொடுத்துடுவாங்களாமேன்னு கேட்கிறார்கள் என ரம்யாவிடம் கூறினார்.

கொதித்த ரம்யா
இதனைக் கேட்ட ரம்யா சொன்னது யார்? என கொதிக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், இதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது, இதுக்கு மேல் ஏதாவது சொல்லி பிக்பாஸ் வீட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











