Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வந்த வேகத்தில் போட்டுக் கொடுத்த நிஷா.. சொன்னது யார் என கொதித்த ரம்யா.. வேற லெவல் ப்ரோமோ !
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெறவுள்ளது.
பழைய மேட்டரை இப்ப தூசு தட்டறாங்களாம்.. ரிலீஸ் நேரத்துல இப்படியொரு பஞ்சாயத்தாமே!
இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் பழைய போட்டியாளர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று அர்ச்சனா, ரேகா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வந்தது முதல் ப்ரோமோவில் தெரிய வந்தது.
என்ன நடக்க போகிறதோ?
அவர்களை பார்த்ததுமே ஆரியின் ரசிகர்கள் பதற ஆரம்பித்துவிட்டனர். என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? உள்ளே வந்துள்ள அன்பு கேங் யாரை எப்படியெல்லாம் ஏற்றி விட போகிறார்களோ என்றெல்லாம் புலம்பி தீர்த்து வருகின்றனர்.
வேலையை ஆரம்பிச்சுட்டாங்க..
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் உள்ளே வந்துள்ள பழைய போட்டியாளர்கள் தங்களின் வேலையை ஆரம்பித்துள்ளனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள ஃபைனலிஸ்ட்டுகளை ஆரத்தழுவி முத்தமிட்டனர்.
ரம்யாவிடம் சொன்ன விஷயங்கள்
தொடர்ந்து விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போடுகின்றனர். இதன் இறுதியாக ரம்யாவிடம் அர்ச்சனாவும் நிஷாவும் பேசுகின்றனர். அப்போது பேசும் நிஷா, பிக்பாஸிலிருந்து வெளியே சென்றபிறகு தனக்கு கிடைத்த எக்ஸ்பீரியன்ஸ்களை பகிர்ந்து கொள்கிறார்.
அழுதது கிளிசரீனா?
அதன்படி பிக்பாஸில் நீங்கள் சண்டை போட்டுக் கொண்டதெல்லாம் ஸ்க்ரீப்ட்டா என்று கேட்டதாகவும், நீங்கள் அழுததெல்லாம் எப்படி? கிளிசரின் ஊத்தி அழுதீங்களா? உங்களுக்குதான் சாப்பாடு வந்துருமாமே? டிரெஸெல்லாம் அயன் பண்ணி கொடுத்துடுவாங்களாமேன்னு கேட்கிறார்கள் என ரம்யாவிடம் கூறினார்.
கொதித்த ரம்யா
இதனைக் கேட்ட ரம்யா சொன்னது யார்? என கொதிக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், இதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது, இதுக்கு மேல் ஏதாவது சொல்லி பிக்பாஸ் வீட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி என கூறி வருகின்றனர்.