Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டீசருக்கு கிடைத்த வரவேற்பு, படத்திற்கு கிடைக்குமா? - ‘லாக்கப்’ பை நம்பியிருக்கும் நித்தின் சத்யா
சென்னை: நடிகராக வேண்டும் என்று முயற்சித்து தமிழ் சினிமாவில் காணாமல் போனவர்கள் ஏராளாம். ஆனால், அவர்களின் பட்டியலில் இணையாமல் தொடர்ந்து போராடி எதாவது ஒரு துறையின் மூலம் தொடர்ந்து சினிமாத்துறையில் சிலர் மட்டுமே பயணிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் நித்தின் சத்யா.
படிபை முடித்ததுமே நடிகராக வேண்டும் என்ற கனவோடு இருந்த நித்தின் சத்யா, படித்தது லண்டனில் என்பதனாலயே, முதல் படமே ஆங்கிலப் படமாக அமைந்தது. அதன் மூலம் 'பென்டிக் லைக் பெக்கம்' என்ற படத்தில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் 'காலாட்படை' எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
2004 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அஜித்துடன் 'ஜி', விக்ரமுடன் 'மஜா' போன்ற படங்களில் நடித்தார்.
2007ல் வெங்கட் பிரபு இயகத்தில் வெளியான 'சென்னை 28' படத்தில் பழனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் பெரிய பெரிய வாய்ப்புகள் கிடைக்க செய்தது. .இந்த படத்திற்கு பிறகு நித்தின் சத்யா 'சத்தம் போடதே' படத்தில் வில்லனாக நடித்திருப்பார், இந்த படத்தில் நாம் அது வரை கானாத நித்தின் சத்யாவை பாத்திருப்போம். அந்த படத்தில் ப்ரித்விராஜ் ஹீரோவாக நடித்திருப்பார்.
நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க நினைத்த நித்தின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதன்படி, ஜெய்யை ஹீரோவாக வைத்து 'ஜருகண்டி' என்ற படத்தை தயாரித்தார். ஆனால், அப்படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததோடு, நித்தின் சத்யா தயாரிப்பாளாராக நஷ்ட்டத்தையும் சந்தித்தார்.
முதல் படம் தோல்வியடைந்தாலும் துவண்டு போகாமல் தொடர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நித்தின் சத்யா, இரண்டாவது படமாக 'லாக்கப்' படத்தை தயாரித்திருக்கிறார். இதில் வைபவ் ஹீரோவாகவும், சீரியல் நடிகை வாணி போஜன் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடித்திருக்கிறார்.
'லாக்கப்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நித்தின் சத்யா உற்சாகமடைந்திருக்கிறார். டீசரை போல படத்திற்கும் வரவேற்பு கிடைத்தால், எதிர்காலத்தில் நித்தின் சத்யா தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவராக உருவெடுக்க வாய்ப்பியிருக்கிறது. அதனால், நித்தின் சத்யா 'லாக்கப்' படத்தை அதிகமாக நம்பியிருக்கிறார்.