Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி மனு
சென்னை: நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அவரின் மனைவி நித்யா.
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அவரின் மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார்.
இந்நிலையில் அவர் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தொடர்பு
நித்யா சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் ஜிம் பயிற்சியாளரின் பிடியில் இருப்பதாக பாலாஜி தெரிவித்தார். மேலும் நித்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார்.
மறுப்பு
பாலாஜி எப்பொழுது பார்த்தாலும் சந்தேகப்படுகிறார். அவர் கூறியது போன்று சப்-இன்ஸ்பெக்டர், ஜிம் பயிற்சியாளர் ஆகியோருடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று நித்யா தெரிவித்துள்ளார்.
விவாகரத்து
இனியும் பாலாஜியுடன் சேர்ந்து வாழ முடியாது. தேவையில்லாமல் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்கிறார் நித்யா.
குழந்தை
என் மகளை என்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்கிறார்கள். என் மகளை நான் நல்ல முறையில் வளர்ப்பேன். அவளை பாலாஜியிடம் கொடுக்க மாட்டேன் என்று நித்யா கூறியுள்ளார்.