Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி மனு
சென்னை: நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அவரின் மனைவி நித்யா.
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அவரின் மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார்.
இந்நிலையில் அவர் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தொடர்பு
நித்யா சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் ஜிம் பயிற்சியாளரின் பிடியில் இருப்பதாக பாலாஜி தெரிவித்தார். மேலும் நித்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார்.
மறுப்பு
பாலாஜி எப்பொழுது பார்த்தாலும் சந்தேகப்படுகிறார். அவர் கூறியது போன்று சப்-இன்ஸ்பெக்டர், ஜிம் பயிற்சியாளர் ஆகியோருடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று நித்யா தெரிவித்துள்ளார்.
விவாகரத்து
இனியும் பாலாஜியுடன் சேர்ந்து வாழ முடியாது. தேவையில்லாமல் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்கிறார் நித்யா.
குழந்தை
என் மகளை என்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்கிறார்கள். என் மகளை நான் நல்ல முறையில் வளர்ப்பேன். அவளை பாலாஜியிடம் கொடுக்க மாட்டேன் என்று நித்யா கூறியுள்ளார்.