'வெண்ணிலாவின் அரங்கேற்றத்தி்ல' நித்தியானந்தா?
சென்னை: வெண்ணிலாவின் அரங்கேற்றம் என்ற பெயரில் ஒரு குண்டக்க மண்டக்க படம் கோலிவுட்டில் ரெடியாகிறதாம். இதில் நித்தியானந்தா விவகாரத்தையும் கோர்த்து விட்டுள்ளார்களாம்.

நித்தியானந்தா, ரஞ்சிதா விவகாரம்
முத்துக்குமார் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். ஏற்கனவே தொடக்கம் என்ற படத்தை இயக்கியவர்தான் இவர். இப்படத்தில் நித்தியானந்தா, ரஞ்சிதா விவகாரத்தையும் சேர்த்துள்ளாராம் முத்துக்குமார்.

திருநங்கை மூர்த்தி
இப்படத்தில் திருநங்கையான மூர்த்தி என்பவர் நித்தியானந்தா வேடத்தில் வருகிறாராம். சமஸ்தி என்பவர் ரஞ்சிதா வேடத்தில் நடித்துள்ளதாக கூறுகிறார்கள்.

படுக்கை அறைக் காட்சிகள்
நித்தியானந்தா, ரஞ்சிதா தொடர்பாக வெளியான வீடியோ காட்சியைப் போன்றே அப்படியே ஒரு காட்சியை இப்படத்தில் வைத்துள்ளனராம். கால் அமுக்கி விடுவது, மசாஜ் செய்வது போன்றவை இதில் இடம் பெறுகிறதாம்.

ஷகீலாவும் இருக்கிறார்
படத்தில் முன்னாள் கவர்ச்சி பிரளயம் ஷகீலாவும் இருக்கிறாராம். அவருக்கு முக்கிய பாத்திரமாம். ஆனால் என்ன பாத்திரம் என்றுதான் தெரியவில்லை.

படத்தின் கதை விபச்சாரம்!
இப்படத்தின் கதை என்னவென்று ஆராய்ந்தபோது விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு பெண் தனது வாழ்க்கையை விவரிப்பதே படத்தின் கதையாம்.
படம் என்னவெல்லாம் சர்ச்சையைக் கிளப்பப் போகிறதோ...!


Click it and Unblock the Notifications











