Don't Miss!
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜோதிகாவின் ரசிகரான பிரேமம் நிவின்பாலி
சென்னை: பிரேமம் படம் மூலம் தமிழக ரசிகைகளை கொள்ளை கொண்ட நிவின்பாலி, நடிகை ஜோதிகாவின் தீவிர ரசிகராம்.
தனது ஆஸ்தான நடிகை ஜோதிகாவை சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் நேரில் சந்தித்து பேசிய புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு லட்சக்கணக்கில் லைக் அள்ளியுள்ளார் நிவின் பாலி.
ஒரு சில நடிகர்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும், ரசிகர்கள் மீண்டும் அவர்களை எப்போது திரையில் பார்ப்போம் என ஏங்குவர். அப்படி பல ரசிகர்கள் இந்த நாயகி மீண்டும் நடிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தவர் நடிகை ஜோதிகா.
இன்று இளம் ரசிகர்களின்.. இல்லையில்லை ரசிகைகளின் மனதை கொள்ளைகொண்ட மலையாள சினிமாவின் இளம் நடிகர் நிவின்பாலியும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நடிகை ஜோதிகாவின் ரசிகராக இருப்பவர் தான். ஆனால் இதுநாள் வரை ஜோதிகாவை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு நிவின்பாலிக்கு கிட்டவே இல்லை.
அவரை அருகில் பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டால் போதும் என நினைத்துக்கொண்டிருந்த நிவின்பாலிக்கு சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.. '36 வயதினிலே' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறப்பு விருது ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த ஜோதிகா அரங்கத்துக்குள் நுழைந்தபோது நிவின்பாலி இருக்கும் வரிசையை கடந்துசெல்ல வேண்டியிருந்தது. அப்போது ஒரு ரசிகராக மாறிய நிவின்பாலி எழுந்து அவருக்கு வணக்கம் சொல்ல, பதிலுக்கு ஜோதிகாவும் சிறிது நேரம் நின்று அவருடன் பேசிவிட்டுத்தான் சென்றார்.
இந்த நிகழ்வை ஒருவர் கிளிக்க.. அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டு பதிவிட்டிருந்தார் நிவின்பாலி. இந்த போட்டோ வைரலானது. கூடவே லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளியது.