Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒஸ்திக்கு சிக்கலா? - தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்
தரணி இயக்கத்தில் சிம்பு - ரிச்சா நடிப்பில் உருவாகியுள்ள ஒஸ்தி படம், வரும் 8-ம் தேதி வெளியாகப்போவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தப் படத்தை சன் டிவிக்கு விற்றிருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர் தர மறுப்பதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் சங்கம், சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து விடுத்துள்ள ஒரு அறிக்கையில், "ஒஸ்தி படத்துக்கு மேற்கண்ட அமைப்புகளில் உள்ள எவரும் எந்த வித தடையையும் விதிக்கவில்லை. எனவே அந்தப் படம் வெளியாவதில் சிக்கல் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன், செயலாளர் பி எல் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.