twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர்களில் காட்சிகள் ரத்து இல்லை- வழக்கம் போல படம் பார்க்கலாம்!

    By Sudha
    |

    Theatre
    சென்னை: பாரத் பந்த்தில் தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இன்று வழக்கம் போல திரைப்படங்கள் காட்டப்படும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் வழக்கம் போல் திறந்து இருக்கும். காலை, பகல் காட்சிகள் வழக்கம் போல இடம் பெறும் என்று கூறியுள்ளார்.

    அதற்கேற்ப சென்னையில் காலை மற்றும் பகல் காட்சிகள் வழக்கம் போல இடம் பெறும் என்று தியேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் 2 காட்சிகள் ரத்து

    அதேசமயம், திருப்பூரில் பந்த்தில் தாங்கள் கலந்து கொள்வதாக கூறியுள்ள மாவட்ட தியேட்டர் உரி்மையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம், காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamil Nadu theatre owners association is not participating in the Bharath Bandh and morning and afternoon shows will be shown as usual, the association said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X