Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல!
இந்த குடியரசு தின விழாவை சென்னை மக்கள் கிட்டத்தட்ட முழுசாகப் புறக்கணித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீசார் நிகழ்த்திய வன்முறை, மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டே தமிழ் மக்களை வஞ்சிக்கின்றன என்ற அதிருப்தி போன்றவைதான் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் என மீடியா அம்பலப்படுத்தி வருகிறது.
இந்த குடியரசுத் தினத்தை மக்கள் மட்டுமல்ல, திரையுலகமும்கூட புறக்கணித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
வழக்கமாக குடியரசுத் தினத்தன்று குறைந்தது நான்கு படங்களாவது வெளியாகிவிடும். ஆனால் இந்த முறை பெரிய படங்கள் ஒன்றுகூட ரிலீசாகவில்லை. ஒரே ஒரு சின்னப்படம் மட்டும்தான். அந்தப் படம் அதே கண்கள்.
கலையரசன், ஜனனி நடித்த இந்தப் படத்தை, ரோஹின் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இந்தப் படம் மட்டும்தான் நேற்று வெளியானது. வேறு புதிய படங்களே வெளியாகாததால், சென்னை போன்ற நகரங்களில் இந்திப் படங்களான காபில், ரீஸ் போன்றவற்றுக்கு கூட்டம் திரண்டது.