Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'இந்த நொடி வரை மெர்சலுக்கு சான்று வழங்கப்படவில்லை!' - சென்சார் புது குண்டு
சென்னை: விலங்குகள் நல வாரியம் ஆட்சேபணை இல்லா கடிதம் தராததால், இதுவரை மெர்சல் படத்துக்கு சென்சார் சான்று வழங்கப்படவில்லை என சென்சார் அதிகாரி மதியழகன் தெரிவித்துள்ளார்.
வெளியீட்டுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் இன்னும் சென்சார் சான்று பெறாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்துள்ள மெர்சல் படம் குறித்து தணிக்கை குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மெர்சலுக்கு ஆணையத்தின் தடையற்ற சான்றிதழ் இல்லாமலேயே யுஏ சான்று எப்படி வழங்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளது.
விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்திற்கு, தணிக்கை குழுவின் தலைவர் மதியழகன் அனுப்பியுள்ள பதிலில், "மெர்சல்' படத்துக்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டதாக கூறப்படும் எந்த குற்றச்சாட்டையும் நான் கடுமையாக மறுக்கிறேன். தணிக்கைக் குழு06.10.2017 அன்று படத்தைப் பார்த்தது. விலங்குகள் நல வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெற்ற பிறகு தணிக்கை தரலாம் என்று அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளது. இந்த நொடி வரை படத்துக்கு தணிக்கை செய்யப்படவில்லை. விலங்குகள் நல வாரியத்திடமிருந்து சான்றிதழ் வரவில்லை என்பதால் இன்னும் வெட்டப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்யவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.