Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மே 31 வரை எந்த படப்பிடிப்பும் இல்லை.. உச்ச நட்சத்திரங்கள் உதவ வேண்டும்.. ஆர்கே செல்வமணி கோரிக்கை!
சென்னை: மே 31ஆம் தேதி வரை எந்த படப்பிடிப்பும் நடைபெறாது என ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் உச்சத்தில் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது தாங்க உண்மையான நட்பு.. கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்று வசந்தபாலனை சந்தித்த லிங்குசாமி!
இதேபோல் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் பலி
சினிமா நட்சத்திரங்களும் கொரோனாவுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், தயாளன், நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, பாடகர் கோமகன் உள்ளிட்டோர் மரணமடைந்தனர்.
கொரோனா தொற்று
இதேபோல் தயாரிப்பாளர்கள் பாபு ராஜா, முத்துக்குமரன், சேலம் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு நிறுத்தம்
கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதுமே முன்னணி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
மே 31வரை ஷூட்டிங் இல்லை
அப்போது பேசிய அவர், மே 31ஆம் தேதி வரை சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார். 16 சீரியல்களின் படப்பிடிப்பு மட்டுமே தற்போது நடைபெறுகிறது என்றும் அதுவும் நாளை முதல் நிறுத்தப்படும் என்றும் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு அதிகம்
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் சினிமா பிரபலங்கள் அதிகளவில் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ள ஆர்கே செல்வமணி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக கூறினார்.
அஜித் நிதியுதவி
மேலும் சினிமா தொழிலாளர்களை காக்க உச்சத்தில் உள்ள நடிகை நடிகர்கள் உதவ முன் வரவேண்டும் என்றும் ஆர்கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் அஜித் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பதாகவும் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.