Don't Miss!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
சினிமா கிரிக்கெட்.. இந்த கூட்டத்தை வைத்து சங்கத்துக்கு கக்கூஸ் கூட கட்ட முடியாதே!
சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் குவியவில்லை என்பதால் நடிகர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். வீடுகளிலும் கூட மக்கள் இந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டவில்லை.
ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் இணைந்து இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியைத் துவங்கி வைத்தனர்.
ஒருசிலரைத் தவிர மொத்த கோலிவுட் நடிகர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டுள்ளனர். எனினும் நடிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மைதானத்தில் கூட்டம் குவியவில்லை.
பல நாட்களாக விளம்பரம் செய்து, முன்னணி நடிகர்கள் ஒன்று திரண்டும் கூட இப்போட்டியைக் காண மக்கள் முன்வரவில்லை. இதற்குக் காரணம் இந்த கிரிக்கெட் போட்டியில் நடிகர் சங்கத்தின் சுயநலம் மட்டுமே அடங்கியுள்ளதாக பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி பேஸ்புக் உள்ளிட்டவற்றில் பிரசாரத்தில் குதித்ததே.
ஸ்டேடியத்தின் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காணப்பட்டன. வெயிலும் அதிகம் என்பதால் யாரும் இந்தப் போட்டி குறித்து ஆர்வம் காட்டவில்லை. இதனால் நடிகர் சங்கம் எதிர்பார்த்த அளவுக்கு இந்த கிரிக்கெட் போட்டி அவர்களுக்கு கைகொடுக்குமா? என்பது சந்தேகம்தான்.