Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் பெய்து வரும் கன மழையால் தியேட்டர்களில் நீர்த்துப் போன கூட்டம்
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை வடபழனி, வேளச்சேரி, ராயப்பேட்டை, அமைந்த கரை, மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
குறிப்பாக வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் கூட்டம் அதிக அளவில் சுற்றிப் பார்க்க செல்லும் வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி களை இழந்து காணப்பட்டது.
அதேபோல் கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. மெட்ரோ ரெயிலிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.