twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமந்தா திருமணம் வெளிநாட்டில் அல்ல: காரணம் அந்த பயமா?

    By Siva
    |

    ஹைதராபாத்: நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் முன்பு திட்டமிட்டது போன்று வெளிநாட்டில் திருமணம் நடக்காதாம்.

    நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

    திருமணத்தை வெளிநாட்டில் நடத்த சமந்தாவும், சைதன்யாவும் திட்டமிட்டனர்.

    ஹைதராபாத்

    ஹைதராபாத்

    திருமணத்தை திட்டமிட்டபடி வெளிநாட்டில் அல்ல மாறாக ஹைதராபாத்திலேயே நடத்த உள்ளார்களாம். வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

    திருமணம்

    திருமணம்

    திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார் சமந்தா. ஆனால் திருமதியான பிறகு கவர்ச்சியாக நடிக்கப் போவது இல்லை என்று தீர்மானித்துள்ளார்.

    அகில்

    அகில்

    நாக சைதன்யாவின் தம்பி அகிலுக்கும், அவரின் காதலி ஸ்ரேயாவுக்கும் வெளிநாட்டில் திருமணம் நடப்பதாக இருந்து கடைசியில் திருமணமே நின்றுவிட்டது. இந்நிலையில் தான் சமந்தாவின் திருமணம் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சமந்தா

    சமந்தா

    அகிலின் திருமணம் நின்று போன பிறகு தங்களின் திருமணமத்தை விரைவில் நடத்துமாறு சமந்தா நாக சைதன்யாவிடம் கூறி வந்ததாக செய்திகள் வெளியானது.

    English summary
    Samantha and Naga Chaitanya are not going to have a destination wedding. Instead they are getting married in Hyderabad.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X