Don't Miss!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மார்ச் 16 முதல் நோ ஷூட்டிங்!- தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
சென்னை: வரும் மார்ச் 16-ம் தேதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடக்காது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப், யு எப் ஓ உள்ளிட்ட அமைப்புகள் விதிக்கும் கட்டணங்களைக் குறைக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது. புதிய படங்கள் வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக திரையரங்க உரிமையாளர்களும் வரும் 16-ம் தேதியிலிருந்து திரையரங்குகளை மூடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த சூழலிலும் இணக்கமான ஒரு நிலை எட்டப்படாததால், டிஜிட்டல் சேவை வழங்குவோருக்கு எதிராக, எந்தப் பட ஷூட்டிங்கும் நடக்காது என அறிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
ஏற்கெனவே, சினிமா தொடர்பான இசை வெளியீட்டு விழாக்கள், புதுப்பட பூஜைகள், பிரஸ் மீட்டுகள் எதுவுமே நடக்கக் கூடாது என தடை அமலில் உள்ள நிலையில், படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.