Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'கருணாநிதியை அழைப்பீர்களா?'... 'சினிமாக்காரங்க எல்லாரையும் அழைப்போம்!'
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "நாளை மறுதினம், 21-ம் தேதி மாலை சினிமா நூற்றாண்டு விழா தொடங்குகிறது. இதனையொட்டி, நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான ஒத்திகை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினமும் நடைபெறுகிறது.
விழாவுக்காக, இதுவரை பார்த்திராத அளவில் மிகப்பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா சினிமா நூற்றாண்டு விழா பற்றி தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் விவாதித்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா எங்களையெல்லாம் அழைத்து பேசினார். சினிமா நூற்றாண்டு விழாவுக்காக எவ்வளவு செலவு ஆகும் என்று விசாரித்தார். ஏறக்குறைய ரூ.30 கோடி செலவாகும் என்று தெரிவித்தோம். உடனே, தமிழக அரசு சார்பில் அவர் ரூ.10 கோடி நிதி உதவி வழங்கினார்.
சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சிகளுக்கு சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த விழாவில் கலந்துகொண்டால்தான் சினிமாவில் அவர்கள் இருப்பது தெரியும். அல்லது சினிமாவிலேயே இல்லாததுபோல் ஆகிவிடும்," என்றார்.
கருணாநிதிக்கு அழைப்பு உண்டா?
அவரிடம், 'சினிமா நூற்றாண்டு விழாவுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார்.
அதற்கு 'பிலிம் சேம்பர்' தலைவர் கல்யாண் நேரடியாக பதிலளிக்கவில்லை. சிறிது நேரம் தயங்கிவிட்டு, 'சினிமா துறையை சேர்ந்த அனைவரும் அழைக்கப்படுவார்கள்' என்று மட்டும் கூறினார்.
விழாவுக்கு அழைக்கப்படுபவர்கள் யார் யார் என்பதை முதல்வர் அலுவலகமே முடிவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.