Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“நோ மீன்ஸ் நோ”.. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை
நோ மீன்ஸ் நோ என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என டாப்ஸி கூறியுள்ளார்.
சென்னை: நோ மீன்ஸ் நோ என்பதை இன்னும் மக்கள் புரிந்துகொள்ளவே இல்லை என நடிகை டாப்ஸி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷ் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. தற்போது தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் முன்னணி நாயகிகளுள் ஒருவராக உள்ளார். அவர் இந்தியில் நடித்திருந்த பிங்க் படம் தான் தமிழில் நேர்கொண்ட பார்வை என ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியில் அமிதாப் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் அஜித் நடித்திருந்தார். அப்படத்தில் அவர் பேசும், 'நோ மீன்ஸ் நோ' என்ற டயலாக் மக்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டது.
இன்னும் எத்தனை வருமோ.. எதிர்பார்க்கவே இல்லை.. ரம்யா பாண்டியனுக்கு அடித்தது செம லக்!
ரசிகர்கள் தொல்லை
இந்நிலையில் நடிகையாக தன் சொந்த வாழ்க்கையில் படும் இன்னல்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார் டாப்ஸி. அதில், ‘பிரபலம் ஆகிவிட்டதால், தான் பிறந்து வளர்ந்த டெல்லியில் கூட சுதந்திரமாக பொது இடங்களுக்கு செல்ல முடியவில்லை. அப்படி சென்றால் தனக்கு மட்டுமின்றி உடன் வருபவர்களுக்கும் மக்கள்தொல்லை கொடுக்கிறாரகள்' என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் ஷாப்பிங்
மேலும், "நோ மீன்ஸ் நோ என்பதை மக்கள் இன்னமும் புரிந்துகொள்ளவே இல்லை. இதனாலேயே நான் வெளிநாடுகளில் மட்டுமே ஷாப்பிங் செய்கிறேன். உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்வது தான் பிடிக்கும். ஆனால் இந்தியாவில் இனி அப்படி நான் செய்ய முடியாது.
தலைகீழ் வாழ்க்கை
மக்களுக்கு என்னை அதிகம் பிடிக்கிறது என்பது சந்தோசமான விஷயம் தான். ஆனால் மெல்லிய கோட்டை கடந்தால் என் சொந்த வாழ்க்கையில் குறுக்கீடுகள் அதிகம் வருகிறது. என்னால் என் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். அது தான் எனக்கு கவலையாக இருக்கிறது. சினிமாவில் பிரபலம் ஆன பிறகு என வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது" என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காதல்
வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் டாப்ஸி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், தான் காதலித்து வருவதாக முதன்முறையாக ஒப்புக் கொண்டார். தனது காதலர் சினிமாத்துறையையோ, கிரிக்கெட் வீரரோ இல்லை என அவர் அப்பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!