Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் இருந்தால் காட்சி வெட்டி எறியப்படும்: சென்சார் அதிகாரி
டெல்லி: திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்கள் வந்தால் அந்த காட்சிகள் வெட்டப்படும் என்று இந்திய தணிக்கை குழுவின் தலைமை செயல் அதிகாரி ராகேஷ்குமார் தெரிவித்தார். தற்போதுள்ள நடைமுறையில் அதுபோன்ற காட்சிகள் மங்கலாக்கப்பட்டும், வசனங்கள் மவுனிக்கப்பட்டும் அனுமதிக்கப்படுவதாகவும், இனிமேல் அதுபோன்ற காட்சிகள் இருக்காது என்றும் அவர் கூறினார்.
மங்கல், மவுனம்
திரைப் படங்களில் ஆபாச வசனமோ, அல்லது மோசமான காட்சியோ இருந்தால், அந்த வசனத்தை வாயசைக்க மட்டும் விட்டுவிட்டு சத்தத்தை கட் செய்துவிடுவார்கள் தணிக்கை குழுவினர். பீப்.. என்ற சத்தம் மட்டும் அப்போது வெளியேவரும். அதேபோல அதேபால பெண்ணின் உடல் பகுதி ஆபாசமாக தெரிந்தால் 'பிளர்' எனப்படும் மங்கலாக்கி மறைப்பார்கள்.
'திறந்த மனதுடன்' அனுஷ்கா
சிங்கம் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா தனது மார்பு கிளிவேஜ் முழுவதும் தெரிய, ஒய்யாரமாக நடந்துவருவது போல காட்சியமைக்கப்பட்ட பாடலை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த பாடலில் அனுஷ்கா மார்பகத்தில் ஆபாசமாக தெரியும் பகுதிகள் மங்கலாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் நடிகைகளின் தொப்புளும் இதுபோல மறைக்கப்படும்.
வன்முறைக்கும் இதே கதி
இதேபோல விபத்து, வன்முறை காட்சிகளில் ரத்தம் சிந்தியபடி மனிதர்கள் விழுந்து கிடக்கும் காட்சியையும் சென்சார் குழு மறைத்து காண்பித்து வருகிறது.
இனிமேல் வெட்டு வெட்டுதான்
இனிமேல் அதுபோல மங்க செய்வதோ, மவுனிக்க செய்வதோ இல்லாமல், காட்சியையே நீக்கிவிட 'ஸ்ட்ரிக்டாக' முடிவு செய்துள்ளது. இதை மத்திய தணிக்கை குழு தலைமை செயல் அதிகாரி ராகேஷ் குமார் உறுதி செய்துள்ளார்.
பெண்கள், குழந்தைகளுக்கு மரியாதை
இதுபற்றி ராகேஷ் குமார் கூறியுள்ளதாவது: திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்படும்.
புரிந்து விடுகிறதே..
வசனங்களை சத்தமில்லாமல் செய்தாலும், காட்சிகளை மங்கலாக்கினாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புரிய வேண்டியது, புரிந்து விடுகிறது. அதனால் இனி, பழைய சென்சார் நடைமுறை இன்றி, காட்சிகளையே நீக்க இருக்கிறோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.