Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
படத்தில் தேசிய கீதம் வந்தால் எழுந்து நிற்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்
டெல்லி: படத்தில் தேசிய கீதம் இசைக்கும் காட்சி வந்தால் எழுந்து நிற்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆமீர் கானின் தங்கல் படத்தில் தேசிய கீதம் இசைக்கும் காட்சி வந்தபோது எழுந்து நிற்காதவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,
படம் துவங்குவதற்கு முன்பு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். ஆனால் பட காட்சியில் அல்லது விளம்பரங்களில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் எழுந்து நின்று மரியாதை செய்யத் தேவையைில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.