twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…! இதுதான் எங்கள் கல்யாணம்!

    தீபிகா படுகோன் திருமணத்திற்கு செல்போன் கொண்டுசெல்லக் கூடாதாம்.

    |

    Recommended Video

    ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணத்திற்கு தயார்- வீடியோ

    மும்பை: தீபிகா படுகோன் ரன்வீர் சிங் திருமண விழாவில் யாருக்கும் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லையாம்.

    பாலிவுட் செல்லங்களான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி இத்தாலியில் நடைபெற உள்ளது.

    No Phone in Deepika wedding!

    இதற்கு முன்பு நடைபெற்ற சோனம் கபூர் ஆனந்த அஹுஜா திருமண விழாவிற்கு ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் திருமண வைபோக புகைப்படங்கள் இணையத்தை கலக்கின.

    நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் க்ளிக்கிய புகைப்படங்களை இணையத்தில் விட்டதால் அவர்கள் திட்டமிட்ட தனிப்பட்ட திருமணம் பொதுத்திருமணமாக மாறியது.

    அதுபோன்ற சம்பவம் தீபிகா திருமணத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதால் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களிடம் செல்போன் எடுத்து வராதீர்கள் எனக் கோர புது மாப்பிள்ளையும் பெண்ணும் திட்டமிட்டுள்ளனர்.

    கோலி அனுஷ்கா ஷர்மா திருமணத்திற்குப் பிறகு இத்தாலியில் நடைபெறும் பாலிவுட் பிரபல ஜோடியின் திருமணம் இதுவாகும். தீபிகா ரன்வீர்சிங் திருமண விழாவிற்கு 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

    English summary
    Padmavati fame actress Deepika Padukone and Ranveer singh destination wedding will take place in Italy on November 20th. This elite couple planned to request their guest to not use mobile phone in wedding.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X