twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்திரிகை வைக்கும் சாக்கில் ரகசியமாக அரசியல் பேசுகிறாரா ரஜினி?

    By Siva
    |

    சென்னை: மகளின் மறுமணத்திற்கு பத்திரிகை வைக்கச் செல்கிறேன் என்ற பெயரில் ரஜினிகாந்த் அரசியல் பேசுவதாக பேச்சு கிளம்பியது.

    ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து பத்திரிகை கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தான் ரஜினியின் செயல் சந்தேகப்படும்படி உள்ளதாக பேசத் துவங்கினார்கள்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    ரஜினிகாந்த் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரை வரிசையாக சந்தித்ததால் அவர் அரசியல் பேசுகிறார் என்று கூறப்பட்டது.

    மறுமணம்

    மறுமணம்

    ரஜினி அரசியல் பேசுவதற்காக யார் வீட்டிற்கும் செல்லவில்லை. அவர் நிஜமாகவே தன் மகளின் மறுமணத்திற்கு அழைப்பு விடுக்கவே சென்றார். மற்றபடி இந்த சந்திப்புகளின்போது அரசியல் குறித்த பேச்சு எழவில்லை.

     திருநாவுக்கரசர்

    திருநாவுக்கரசர்

    சவுந்தர்யா, விசாகன் மறுமணம் நடக்க திருநாவுக்கரசர் தான் காரணமாக இருந்துள்ளார். அந்த நன்றியுணர்வில், மரியாதையில் அவருக்கு முதல் பத்திரிகை வைத்துள்ளார் ரஜினி. இதை தவிர அவர் செயலில் எந்த உள்நோக்கமும் இல்லையாம்.

    கமல்

    கமல்

    ரஜினி தனது நெருங்கிய நண்பர்களுக்கும் நேரில் சென்று பத்திரிகை கொடுத்துள்ளார். பத்திரிகை கொடுக்கச் சென்ற இடத்தில் அவர் தனது நண்பன் கமலை கட்டிப்பிடித்த காட்சியை பார்த்த ரசிகர்கள் அசந்துவிட்டனர்.

    English summary
    Rajinikanth was not discussing about politics during his recent visits of political leaders' house. He is busy inviting people for his daughter Soundarya's wedding.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X