Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
"அவங்க" சண்டையால் "எங்க" நட்பு பாதிக்காது.... சொல்கிறார் வரலட்சுமி
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் அப்பா சரத்குமார் தரப்புக்கும், விஷால் தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் எனக்கும், விஷாலுக்கும் இடையிலான நட்பு ஒருபோதும் பாதிக்கப்படாது என்று சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரவட்சுமி கூறியுள்ளார்.
வரலட்சுமி - விஷால் காதலிப்பதாகவும், இதுவே சரத்குமார், விஷால் இடையிலான மோதலுக்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த மோதல் ஈகோ பிரச்சினையாகி, கெளரவப் பிரச்சினையாக மாறி இப்போது நடிகர் சங்கமே இரண்டாக பிளந்து போகக் காரணமாகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஊரே கூடி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இரு தரப்பும் ஒருவருக்கொருவர் அசிங்கமாகவும், வாடா போடா என்றும் பேசி நாறிப் போய் விட்டனர். இந்த நிலையில் இன்று தேர்தல் நடந்தது.
தேர்தலில் வாக்களிக்க வந்த வரலட்சுமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அப்பா சரத்குமார் தரப்புக்குதான் வாக்களித்தேன்.அதேவேளையில் நண்பராக விஷாலுக்கு என் ஆதரவு இருக்கிறது.
இந்த தேர்தல் களேபரங்களால் விஷாலுக்கு எனக்கும் உள்ள நட்பில் எந்த விரிசலும் ஏற்படாது. வெற்றி பெறும் அணியினர் கொடுத்த வாக்கினை காப்பாற்ற வேண்டும். நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார் வரலட்சுமி.