Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தமிழகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை!- ஆர்கே செல்வமணி
ஃபெப்சி ஸ்ட்ரைக் காரணமாக தமிழகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை என்று ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் காரணமாக ஃபெப்சி அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.
இதனால் 35 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ரஜினியின் காலை, விஜய்யின் மெர்சல் படங்களும் அடங்கும்.
ஆனால் விஷால் படம் உள்ளிட்ட எட்டுப் படங்களின் படப்பிடிப்புகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஆர்கே செல்வமணி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
"ஃபெப்சி ஸ்ட்ரைக் அறிவித்த பிறகு தமிழகத்தில் எங்கும் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இது தெரியாமல் இங்கே படப்பிடிப்பு நடக்கிறது, அங்கே படப்பிடிப்பு நடக்கிறது என தவறான தகவல்களை சிலர் பரப்பிக் கொண்டுள்ளனர். பிரச்சினை தீரும் வரை படப்பிடிப்புகள் நடக்காது. தவறான செய்திகளை யாரும் பரப்பிவிட வேண்டாம்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.