Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தானா சேர்ந்த கூட்டம் டீம் செய்த புதுமை... பாராட்டிய சென்சார் போர்டு!
சென்னை : சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு பேசினர்.
'தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு புதுமையைச் செய்திருப்பதாகவும், சென்சார் போர்டு அதிகாரிகளே ஆச்சரியமாக பார்த்ததாகவும் சூர்யா தெரிவித்தார்.
மூவருக்கும் வரவேற்பு
இந்த சந்திப்பில் பேசிய சூர்யா, "எங்க இன்டஸ்ட்ரியில் இருந்து அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்க இருக்கும் ரஜினி சார், கமல் சார், விஷால் அவர்களுக்கும் அவங்க எல்லோரோட வரவும் நல்வரவா இருக்கும். அவங்களுக்கு நாங்க எல்லோரும் கண்டிப்பா ஆதரவு கொடுப்போம்.
ஸ்பெஷல் 26 இல்லை
'ஸ்பெஷல் 26' படத்தை நான் பார்த்திருக்கேன். இந்தப் படம் 'ஸ்பெஷல் 26' கதைக்குள்ளேயே போகலை. விக்னேஷ் சிவன் சொன்ன 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் கதை வேற வேற ரூட்டுல போச்சு. முதல் சந்திப்பிலேயே கதை சொல்லி இம்ப்ரெஸ் பண்ணிட்டார்.
நோ ஸ்மோக்கிங் கார்டு இல்லை
இந்தப் படத்தில் 'நோ ஸ்மோக்கிங், லிக்கர் இஸ் இஞ்ஜூரியஸ் டு ஹெல்த்' டைட்டில் கார்டு பயன்படுத்தவே இல்லை. இந்தப் படத்தில் அப்படி எந்தக் காட்சிகளும் இருக்காது. சென்சார் போர்டு அதிகாரிகளே இப்படி டைட்டில் கார்டு இல்லாம படம் பார்த்து ரொம்ப நாளாச்சுனு ஆச்சரியப்பட்டு பாராட்டினாங்க.
முதல் நாளே பார்க்கணும்
என் படங்களை முதல் நாள் தியேட்டரில் பார்க்கமாட்டேன். ஆடியன்ஸ் ரியாக்ஷன் எப்படி இருக்குமோனு பயப்படுவேன். ஆனா, இந்தப் படத்தை முதல் நாளே பார்க்கலாம்னு இருக்கேன். இந்தப் படம் அந்தளவு எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு" எனப் பேசினார் சூர்யா.