சோறா, படமா?: ட்விட்டரை தெறிக்கவிடும் தமிழர்கள் #NoCauveryNoCinema
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமையாமல் சினிமா படங்களை பார்க்கப் போவது இல்லை என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் 1ம் தேதி துவங்கிய சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. ஸ்டிரைக்கால் முடங்கிய புதுப்படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் புதுப்படங்களை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.
சோறா, படமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
காவிரி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்குமாறு கூறிவிட்டு தற்போது புதுப்படங்களை ரிலீஸ் பண்ணப் போகிறீர்களா? என்று நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர்.
சுயநலம்
சினிமாக்காரர்கள் தங்களுக்கு என்று வந்துவிட்டால் சுயநலமாக செயல்படுவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
படம்
காவிரி பிரச்சனை தீராமல் படம் பார்க்கும் எண்ணம் இல்லை என்று நெட்டிசன்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
புதுப்படங்களை ரிலீஸ் செய்தால் என்ன நடக்கும், யாரிடம் இழப்பீடு கேட்க வேண்டும் என ஒருவர் தியேட்டர் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
படமா
சோறா, ஸ்கோரான்னு கேட்டீங்களே இப்ப சோறா, படமான்னு மக்களே நீங்களே முடிவு செய்யுங்கள் என்கிறார்கள்.
டிரெண்டிங்
தமிழர்கள் காவிரி, சினிமா பற்றி ட்வீட்டி வருவதால் #NoCauveryNoCinema என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இல்லை
தண்ணீர் தான் மக்களுக்கு முக்கியம், சினிமா இல்லை


Click it and Unblock the Notifications











