Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
KGF Chapter 2 வெற்றி பெற்ற வயிற்றெரிச்சல் .. கிச்சா சுதீப்புக்கு சபாஷ் சொன்ன பிரபல இயக்குநர்!
பெங்களூரு: இந்தி தேசிய மொழி என நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை கிச்சா சுதீப் சார் என பிரபல இயக்குநர் போட்டிருக்கும் ட்வீட் கன்னட ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு பொறாமை என்று தனது ட்வீட் மூலம் குறிப்பிட்டு விளாசி உள்ளார் அந்த இயக்குநர்.
இந்தி தேசிய மொழி இல்லை என்றால் உங்கள் தாய் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுறீங்க என கேட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டார் அஜய் தேவ்கன்.
அஜய் தேவ்கனுக்கு அந்த காண்டு தான்.. இந்தி மேல எல்லாம் பாசம் இல்லை.. விளாசும் நெட்டிசன்கள்!
வெடித்தது சர்ச்சை
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய பிரபல கன்னட ஹீரோ கிச்சா சுதீப் "இந்தி தேசிய மொழி இல்லை" என கன்னட திரைப்பட விழாவில் பேசியதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்தி தான் தேசிய மொழி என அஜய் தேவ்கன் சொல்ல, ஒட்டுமொத்த இந்திய நெட்டிசன்களும் அவருக்கு எதிராக கமெண்ட்டுகளை போட்டு கதற விட்டனர்.
இருவரும் சமாதானம்
கன்னட படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுறீங்க என அஜய் தேவ்கன் கேட்டதும், டென்ஷன் ஆகி பிரச்சனை பெரிதாக்க நினைக்காமல் அவருக்கு தெளிவாக புரிய வைக்க முயன்று பாராட்டுக்களை அள்ளி உள்ளார் கிச்சா சுதீப். மேலும், நமக்குள் ஏன் பிரச்சனை என கிச்சா சுதீப் ட்வீட் போட்டு அஜய் தேவ்கனை அமைதி படுத்தினார்.
சும்மா விடமுடியாது
ஆனால், அஜய் தேவ்கனின் ஆழ் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவரது தவறான சிந்தனைக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் தொடர்ந்து அஜய் தேவ்கன் போட்ட ட்வீட்டுக்கு எதிராக அவருக்கு பாடம் புகட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராம் கோபால் வர்மா கேள்வி
ரசிகர்கள் மட்டுமின்றி பல ப்ளூ டிக் பிரபலங்களும் நடிகர் அஜய் தேவ்கனுக்கு இந்தி தேசிய மொழி இல்லை என்பதை உரைக்கும் படி எடுத்து உரைத்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு நடிகர் அஜய் தேவ்கனுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். மேலும், கிச்சா சுதீப் சொன்னதற்கு சபாஷ் சொல்லி உள்ளார்.
வயிற்றெரிச்சல்
கன்னட டப்பிங் படமான கேஜிஎஃப் 2 திரைப்படம் முதல் நாளிலேயே பாலிவுட்டில் 50 கோடிக்கும் அதிகமாகி வசூல் வேட்டை நடத்தியதும், இந்தி படங்கள் முதல் நாளில் 4 கோடி கூட வசூல் செய்ய முடியாத படி தவிப்பதையும் பார்த்துத் தான் பொறாமையில் இப்படி ஒரு ட்வீட்டை அஜய் தேவ்கன் போட்டுள்ளார் என்றும் சாடி உள்ளார் ராம் கோபால் வர்மா.
Recommended Video
400 கோடியை நோக்கி
இந்தி பெல்ட்டிலேயே 400 கோடி ரூபாய் வசூலை நோக்கி கன்னட திரைப்படம் ஒன்று செல்வது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் எந்தளவுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பதன் வெளிப்பாடே அஜய் தேவ்கனின் இந்த ட்வீட் என்றும் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ரன்வே 24 படத்தை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!