Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பட தயாரிப்பு: மச்சினி அல்ல மாமாவோட நிறுத்திக் கொண்ட தனுஷ் #NEEK
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தை தனுஷ் அல்ல மாறாக கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தை ராஜ் கிரணை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி அதை தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்திடம் அளித்துள்ளாராம்.
அந்த படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று முதலில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சவுந்தர்யாவின் படத்தை ரஜினியின் கபாலி படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தனது படத்தில் நடிக்க ஆர்வமுள்ள புதுமுகங்கள் விண்ணப்பிக்குமாறு சவுந்தர்யா ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சவுந்தர்யாவின் படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை அனுப்பி வைக்கவும்.
All those who are interested, pls do send us your details 🙂 #NEEK #CastingCall pic.twitter.com/ZZJGQExpow
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 26, 2016