Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் குடிகாரியா?, எம்.எல்.ஏ. கமெண்ட் வொர்த்தே இல்லை: நடிகை ஹேமமாலினி
மும்பை: குடி பழக்கம் பற்றி பேசிய எம்.எல்.ஏ. குறித்து கருத்து தெரிவித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லையாம் நடிகை ஹேமமாலினி.
மகாராஷ்டிரா மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.வான பச்சு காது நாந்ததில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். விவசாயிகளின் தற்கொலை பற்றி பேசிய அவர் பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினியை வம்புக்கு இழுத்திருந்தார்.
ஹேமாவின் குடிப்பழக்கம் பற்றி கூட்டத்தில் பேசினார்.
தற்கொலை
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள மதுப்பழக்கம் காரணம் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நடிகை ஹேமமாலினி தினமும் மது அருந்துகிறார், அவர் என்ன தற்கொலையா செய்து கொண்டார்? என்றார் எம்.எல்.ஏ.
ஹேமமாலினி
எம்.எல்.ஏ. பச்சு காது இப்படி பேசியிருக்கிறாரே என்று ஹேமமாலினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஹேமா கூறுகையில், யாரோ ஒருத்தர் பேசியது பற்றி கருத்து தெரிவித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அது வொர்த்தே இல்லை என்றார்.
அமைதி
வொர்த்தே இல்லாத விஷயம் பற்றி பேச வேண்டுமா என்று தான் அமைதியாக இருக்கிறேன். அவருக்கு பப்ளிசிட்டி தேவைப்படுவதால் குறுக்குவழியை தேர்வு செய்துள்ளார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றார் ஹேமமாலினி.
ஜெயா பச்சன்
அரசியல் தலைவர்கள் நடிகைகளை வம்புக்கு இழுப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக 2012ம் ஆண்டு நாடாளுமன்ற அவையில் பேச எழுந்த எம்.பி.யும், நடிகையுமான ஜெயா பச்சனை பார்த்து அப்போதைய உள்துறை அமைச்சர் சுஷில் குமாபர் ஷிண்டே, சகோதரியே, முக்கியமான விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் இது சினிமா இல்லை என்றார். இதை கேட்ட ஜெயா பச்சன் அதிர்ச்சியில் அவர் இடத்தில் பேசாமல் அமர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.